எப்ஸ்டீன் விவகாரம்: தலைமறைவாக இருந்த பீட்டர் மண்டல்சன் முதன்முறையாகப் பிடிபட்டார்! - முகத்தை மறைத்துக் கொண்டு ஓட்டம்!

ஜெஃப்ரி எப்ஸ்டீன் தொடர்பான ரகசிய ஆவணங்கள் வெளியாகி, உலகமே அதிர்ந்து போயிருக்கும் நிலையில், கடந்த சில நாட்களாக எங்கு இருக்கிறார் என்று தெரியாமல் இருந்த பிரித்தானியாவின் முன்னாள் தூதர் பீட்டர் மண்டல்சன் (Peter Mandelson), இன்று லண்டனில் முதன்முறையாகப் பொதுவெளியில் தென்பட்டார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் மேற்பார்வைக் குழு, மண்டல்சனை நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு சம்மன் அனுப்பிய பிறகு அவர் தலைமறைவாக இருப்பதாகக் கருதப்பட்டது. இன்று லண்டனின் ஒரு தெருவில் அவர் தனது காரை நோக்கிச் சென்றபோது புகைப்படக் கலைஞர்களின் கேமராவில் சிக்கினார். அப்போது அவர் மிகவும் கவலையுடனும், பத்திரிகையாளர்களின் கேள்விகளைத் தவிர்க்க முகத்தை மறைத்துக் கொண்டும் வேகமாகச் சென்றார்.

எப்ஸ்டீனின் குற்றச் செயல்களுக்கு மண்டல்சன் உடந்தையாக இருந்தாரா அல்லது அவருக்குத் தெரியாமல் எப்ஸ்டீன் அரசு ரகசியங்களைப் பயன்படுத்தினாரா என்பது குறித்து அமெரிக்க எம்.பி.க்கள் அவரிடம் விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனர்.

லண்டன் மற்றும் வில்ட்ஷயர் (Wiltshire) பகுதிகளில் உள்ள மண்டல்சனுக்குச் சொந்தமான இடங்களில் ஏற்கனவே காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.இவ்வளவு அழுத்தங்கள் இருந்தும், தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்றும், எப்ஸ்டீனின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் மண்டல்சன் தொடர்ந்து கூறி வருகிறார்.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிப்ரவரி 27 காலக்கெடு நெருங்கி வருவதால், மண்டல்சன் அமெரிக்காவிற்குச் செல்வாரா அல்லது லண்டனில் இருந்தே பதில் அளிப்பாரா என்பது இப்போது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.

Previous Post Next Post

Contact Form