அரசு ஊழியர்கள் 2 நிமிடத்துக்கு முன்னதாக அலுவலகத்தை விட்டு சென்றதற்காக, அவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள சம்பவம் ஜப்பானில் நிகழ்ந்துள்ளது.

இதுகுறித்து கல்வி வாரியம் விளக்கம் அளித்துள்ளதாக The Sankei News செய்தி வெளியிட்டுள்ளது. அதில்,‘கடந்த 2019 மே மாதம் முதல் ஜனவரி 2021 வரையிலான கால இடைவெளியில் 7 ஊழியர்கள் 316 முறை இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். 2 நிமிடங்கள் முன்னதாக கிளம்புவதற்காக காரணம் என்ன? என ஊழியர்களிடம் கேட்ட போது, 5.17 மணிக்கு வரும் பேருந்தை தவறவிட்டால், அதன் பின்னர் 5.47 மணிக்கு வரும் பேருந்தில்தான் செல்ல முடியும் என்று விளக்கம் அளித்துள்ளனர்.
அலுவலக நேரத்தை விட 2 நிமிடங்கள் முன்னதாக சென்ற இரண்டு ஊழியர்களுக்கு எச்சரிக்கை கடிதமும், 4 நபர்களுக்கு கடுமையாக எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு உதவும் வகையில் செயல்பட்ட 59 வயது பெண் ஊழியரின் சம்பளத்தில் வரும் காலத்தில் பத்தில் ஒரு பங்கு குறைக்கப்பட்ட உள்ளது’ என புனபாஷி நகர கல்வி வாரியம் அறிவித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அலுவல நேரத்தை விட 2 நிமிடம் முன்னதாக சென்ற ஊழியருக்கு சம்பளக் குறைப்பு செய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.