தாய்லாந்தில் திருட சென்ற இளைஞர் செய்த காரியம் அவரின் திருட்டு தொழிலுக்கே ஆப்பு வைக்கும் வகையில் அமைந்துள்ளது.

சோர்வாக இருந்த அதித், ஏசி ரிமோட்டை பார்த்த பிறகு அங்கேயே சிறிது நேரம் இருந்துள்ளார். அதன்பின் என்ன யோசித்தாரோ என்னவோ உடனடியாக ஏசியை ஆன் செய்து அங்கேயே தூங்கியுள்ளார்.
வீட்டின் உரிமையாளர் எழுந்திருப்பதற்கு முன்பு சென்றுவிடலாம் என படுத்த அதித், நன்கு படுத்து உறங்கியிருக்கிறார். காலையில் எழுந்த வீட்டின் உரிமையாளர் மகள் வீட்டில் இல்லாத நேரத்தில் ஏசி ஓடிக்கொண்டிருந்ததைக் கண்டு ஆச்சர்யமடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, யாரோ அடையாளம் தெரியாத நபர் வசதியாக படுத்து தூங்கிக்கொண்டிருந்ததைப் பார்த்திருக்கிறார்.
ஏதோ சத்தம் கேட்பதுபோல எழுந்த அதித்தை சுற்றி அந்த அறைமுழுவதும் காவலர்களால் நிறைந்திருந்துள்ளனர். இதனைக் கண்டு குழப்பமடைந்த அதித்திற்கு இப்போது தான் தெரிந்துள்ளது தான் வந்தது காவல்துறை அதிகாரி வீடு என்று.
மேலும் அதித்தை கைதுசெய்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்திவருகின்றனர். இதேபோல் ஆந்திராவில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் நடந்த சம்பவமும் குறிப்பிடத்தக்கது.