Posted in

‘தளபதி’யின் வாகனம் அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கு ரெடி! – புதுச்சேரி புறப்பட்ட ‘தவெக’வின் பிரச்சார ரதம்! 

2 மாத மௌனத்திற்குப் பிறகு ‘தளபதி’யின் வாகனம் அனல் பறக்கும் பிரச்சாரத்துக்கு ரெடி!புதுச்சேரி நோக்கிப் புறப்பட்ட ‘தவெக’வின் பிரச்சார ரதம்!

சென்னை/புதுச்சேரி: கரூரில் நடந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து இரண்டு மாதங்களாகப் பொது நிகழ்ச்சிகளில் நேரடியாகக் கலந்து கொள்ளாமல் இருந்த ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ (தவெக) தலைவர் நடிகர் விஜய்யின் பிரச்சார வாகனம்,  புதுச்சேரியை நோக்கிப் புறப்பட்டது.

கரூர் சம்பவத்துக்குப் பின் முதல் பரப்புரை!

சமீபத்தில் கரூரில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்துக்குப் பிறகு, தலைவர் விஜய் நேரடியாகப் பொதுமக்களைச் சந்திப்பதைத் தவிர்த்து வந்தார். இந்த நிலையில்,  (டிசம்பர் 9) புதுச்சேரி உப்பளம் துறைமுக வளாகத்தில், காவல்துறையின் அனுமதியுடன் த.வெ.க.வின் முதல் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த முக்கியமான பொதுக்கூட்டத்திற்காகவே, விஜய்யின் சிறப்புப் பிரச்சார வாகனம்  புதுச்சேரிக்குச் சென்றுள்ளது. கரூர் துயரச் சம்பவத்திற்குப் பிறகு, விஜய்யின் பிரச்சார வாகனம் முதன்முறையாகப் பொதுவெளியில் பயணிக்கிறது.

நின்றபடி பேசும் தலைவர்! நின்றபடியே கேட்கும் தொண்டர்கள்!

நாளை நடக்கும் பொதுக்கூட்டத்தில், தலைவர் விஜய் தனது பிரச்சார வாகனத்தில் நின்றவாறு தொண்டர்களிடையே உரையாற்ற உள்ளார். மேலும், இந்தக் கூட்டத்தில் பங்கேற்கும் தொண்டர்களுக்கும் இருக்கைகள் கிடையாது என்றும், அவர்களும் நின்றபடியே விஜய்யின் உரையை முழுமையாகக் கேட்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இது, தொண்டர்கள் மத்தியில் ஓர் எழுச்சியையும், சமத்துவமான பங்கேற்பையும் உருவாக்க வேண்டும் என்ற விஜய்யின் எண்ணத்தைக் காட்டுவதாகப் பார்க்கப்படுகிறது.

புதுச்சேரி பொதுக்கூட்டம், 2026 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டுள்ள ‘தமிழக வெற்றிக் கழகத்தின்’ அரசியல் பயணத்தில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்று அரசியல் வட்டாரங்கள் கணிக்கின்றன.