Posted in

பள்ளி மாணவிக்கு ஆபாசப் படங்களை அனுப்பிய சாரதி: மடக்கிப் பிடித்த பொலிசார் !

வயம்ப பல்கலைக்கழக மாணவி ஒருவரின் கையடக்கத் தொலைபேசிக்கு நிர்வாணப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி மிரட்டியதாகக் கூறப்படும் ஒரு சாரதி, வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் புதன்கிழமை (ஜூலை 02) கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாவ, பலல்ல, அமுனுகோலேவைச் சேர்ந்த 24 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குருநாகலைச் சேர்ந்த குறித்த மாணவி, வடமேற்கு மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அளித்த புகாரைத் தொடர்ந்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

சந்தேக நபர், போலியான முகநூல் (Facebook) கணக்கைப் பயன்படுத்தி, மாணவியின் முகநூல் கணக்கிற்கு ஆபாசமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பி, தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு மிரட்டியுள்ளார்.

அவ்வாறு செய்யாவிட்டால், அந்தப் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அனைத்தும் முகநூலில் வெளியிடப்படும் என்றும் மிரட்டியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.