Posted in

கொஸ்கமவில் துப்பாக்கிச்சூடு: சிறுமி உட்பட மூவர் காயம்

கொஸ்கம, சுதுவெல்ல பகுதியில் இன்று அதிகாலை நடந்த துப்பாக்கிச்சூட்டில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்தனர்.

காயமடைந்த மூவரும் முச்சக்கர வண்டியில் பயணித்துக் கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பிஸ்டல் ரக துப்பாக்கியால் சுட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்தச் சம்பவத்தில் அவிசாவளையைச் சேர்ந்த 30 வயதுடைய தாயும், அவரது 12 வயது மகளும், 44 வயதுடைய மற்றொரு ஆணும் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூட்டுக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. சந்தேக நபர்களைக் கைது செய்ய கொஸ்கம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.