Posted in

செம்மணி புதை குழியில் 40 மனித எச்சங்கள் இன்னும் தோண்டப்பட்டு வருகிறது !

யாழ்ப்பாணம் – செம்மணி மனித புதைகுழி அகழ்வின் இரண்டாம் கட்டத்தின் 8ஆம் நாள் பணிகள் இன்று (ஜூலை 03) முன்னெடுக்கப்பட்டன. இன்றைய அகழ்வுடன் மொத்தம் 40 மனித எச்சங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

கண்டறியப்பட்ட எச்சங்களில், 34 முழுமையான மனித எலும்புக்கூடுகளும், மேலதிகமாக 6 எலும்புக்கூடு தொகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் இரண்டு எலும்புக்கூடுகள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த அகழ்வுப் பணிகள் யாழ்ப்பாண நீதவான் நீதிமன்ற நீதிபதி A.A. ஆனந்தராஜாவின் மேற்பார்வையில் நடைபெற்று வருகின்றன. தொல்லியல் துறை பேராசிரியர் ராஜ் சோமதேவா மற்றும் சட்டவைத்திய அதிகாரி செல்லையா பிரணவன் ஆகியோரும் இந்த அகழ்வில் பங்கேற்றுள்ளனர்.