2026 தேர்தலில் விஜய்யின் TVK கட்சியுடன் இணைந்து போட்டியிடவே ராகுல் காந்தி விரும்பி இருந்தார். ஆனால், காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பில் அவர் இல்லை. இதனால் தமிழ்நாட்டில் உள்ள செல்வப்பெருந்தகை போன்ற மாநிலத் தலைவர்கள் டெல்லி சென்று காங்கிரஸ் தலைவரைச் சந்தித்து, திமுகவுடன் தான் கூட்டணி வைக்க வேண்டும் என்றும், தமக்கே கள நிலவரம் தெரியும் என்றும், டெல்லியில் உள்ள மேலிடம் பல விஷயங்களை அறியவில்லை என்றும் வாதாடி வந்தார்கள்.
இதனால் ராகுல் காந்தி எடுத்த முடிவை மாற்ற வேண்டிய சூழ்நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். ராகுல் முடிவை மாற்றவில்லை என்றால், தமிழக காங்கிரஸ் இரண்டாக உடைந்து விடும் என்று மூத்த தலைவர் சிதம்பரம் மிரட்ட, வேறு வழியில்லாமல் காங்கிரஸ் தலைமை திமுகவுடன் கூட்டணி என்று அறிவித்தது. விஜய்யின் கட்சி பல இடங்களில் வெல்லும் என்று தெரிந்தும், TVK உடன் கூட்டணி வைக்க முடியவில்லை என்ற மன விரக்தி ராகுலிடம் இருப்பதனால் தான் அவர் தமிழகம் வந்து எந்தவொரு பிரச்சாரத்திலும் ஈடுபடவில்லை என்பது தெளிவாகப் புரிகிறது.
திமுகவுடன் தான் கூட்டணி என்று விடாப்பிடியாக இருந்த தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் காந்தி ஒரு விஷயத்தை மட்டுமே சொல்லி அனுப்பியுள்ளார். அது என்னவென்றால், தேர்தலில் ஒதுக்கப்பட்ட அவ்வளவு சீட்களிலும் வெல்ல வேண்டும்; அப்படி முடியவில்லை என்றால், தேர்தலுக்குப் பின்னர் நான் என்ன சொல்கிறேனோ அதனைத்தான் நீங்கள் கேட்க வேண்டும் என்பதுதான் ராகுல் போட்ட ஒரே கண்டிஷன். இதனால்தான் செல்வப்பெருந்தகை ஆடிப்போயுள்ளார்.
ஸ்டாலின் கொடுத்த ஆதரவை ஏற்றுக்கொண்டு திமுகவுக்கு ஆதரவாகப் பேசி, கடைசியில் காங்கிரஸ் தலைமையை அடிபணிய வைத்தவர் செல்வப்பெருந்தகை. ஆனால், 2026 தேர்தலில் திமுக தனது செல்வாக்கை இழந்துள்ள நிலையில், பெரும்பான்மை கிடைக்குமா என்று கூட தெரியாத நிலையில் இருக்கிறது. இப்படி இருக்க, கிடைத்த 28 இடங்களிலும் காங்கிரஸால் வெல்வது என்பது முடியாத காரியம். ஒரு குறைந்தபட்சம் 10 இடங்களையே பிடிக்க முடியும்.
விஜய் சுமார் 23% சதவீத வாக்குகளை எடுத்தால் கூட, இரண்டு பெரிய கட்சிகளுமே தனித்து ஆட்சியமைக்க முடியாது. இப்படியான ஒரு சூழ்நிலை வரப்போகிறது. விஜய் ஒன்றும் 150 இடங்களைக் கைப்பற்றப்போவது இல்லை. ஆகக்கூடுதலாக எல்லாமே மாறினால் கூட 60 தொகுதிகளைப் பிடிக்க முடியும். இந்நிலை வந்தால், உடனே காங்கிரஸ் திமுகவை விட்டுப் பிரிந்து விஜய்யின் TVK கட்சியோடு ஆட்சியை அமைக்க இருக்கிறது என்பது மிகவும் திட்டவட்டமாகத் தெரிகிறது. சில வேளைகளில் அதிமுக, TVK, காங்கிரஸ் என்று மூன்று கட்சிகளும் இணைந்து ஆட்சி அமைக்கும் என்ற நிலை கூட தோன்றலாம். அப்படியென்றால் BJP நிலை என்ன ஆகும் என்று கேட்பீர்கள்.
BJP பங்காளி கட்சியாக இதே கூட்டணியில் அங்கம் வகிக்கும். இதுபோல ஒரு நிலை தோன்றினால் கூட வியப்பில்லை என்ற சூழல் தான் இருக்கிறது. திமுகவைப் பொறுத்தவரை இது வாழ்வா சாவா என்ற போராட்டம். இதனால் அவர்கள் ஒரு ஓட்டுக்கு 8,000 ரூபாய் என்ற கணக்கில் இறங்கி வேலை செய்கிறார்கள். இதனால் காசை வாங்கிக்கொண்டு மனச்சாட்சி இல்லாமல் வாக்கு போடும் ஒரு கும்பல் இருக்கும் வரை திமுகவின் வாக்கு வங்கி சரியப்போவது இல்லை என்றுதான் கூற வேண்டும்!