இலங்கையில் பாலியல் சிறுபான்மையினருக்கான (Lesbian, Gay, Bisexual, Transgender and Queer – LGBTQ) சுற்றுலாவை மேம்படுத்துவதற்கான முடிவுக்கு யாழ்ப்பாண மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சனா எதிர்ப்புத் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், “கற்பித்தல் தண்டனைக்கு (corporal punishment) எதிராகச் செயல்படும் அரசாங்கம், அதே வேளையில் எல்ஜிபிடிகியூ+ சுற்றுலாவை ஊக்குவிப்பது அபத்தமானது” என்று கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இலங்கைக்கு உலகில் ஒரு கௌரவம் இருந்தது. இப்போது, அது ஒரு எல்ஜிபிடிகியூ+ நாடாக மாறிவிட்டது. நாடாளுமன்றத்தின் முன் வரிசைகளில் சில வேடிக்கையான விடயங்களைக் காணக்கூடியதாக இருக்கும். இது சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகங்கள் சமாதானமாக வாழ்ந்த பௌத்த நாடு. இப்போது, அது எல்ஜிபிடிகியூ+ நாடாக மாறியுள்ளது. எதிர்காலத்தில் நமது ஜனாதிபதியும் பிரதமரும் காணொளிகளைப் பதிவிடுவதன் மூலம் எல்ஜிபிடிகியூ+ ஐப் பிரச்சாரம் செய்யலாம். எங்கள் நாட்டுக்கு உலகில் ஒரு கௌரவம் உள்ளது. இலங்கை இந்தியப் பெருங்கடலின் முத்து என்று கருதப்படுகிறது. நாம் எல்ஜிபிடிகியூ+ ஐ ஊக்குவிக்கிறோம், அதேவேளை கற்பித்தல் தண்டனைக்கு எதிராக குரல் கொடுக்கிறோம்” என்று தனது அதிருப்தியை வெளியிட்டார்.
குறிப்பு: இலங்கையில் எல்ஜிபிடிகியூ+ சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும், நாட்டை ஒரு பாதுகாப்பான மற்றும் அனைவரையும் வரவேற்கும் இடமாக நிலைநிறுத்துவதற்கும், ஈக்குவல் கிரௌண்ட் (EQUAL GROUND) என்ற அமைப்புடன் இணைந்து ஒரு திட்டத்தை சுற்றுலாத்துறை உத்தியோகபூர்வமாக அங்கீகரித்துள்ளது. இந்தச் சூழலிலேயே நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சனா தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.