ஐரோப்பா/கோபன்ஹேகன்: ஐரோப்பா முழுவதும் நேட்டோ (NATO) இராணுவத் தளங்கள் மற்றும் விமான நிலையங்களைத் தொடர்ந்து அச்சுறுத்தி வரும் மர்ம டிரோன்களால் அதிர்ச்சியில் உறைந்துள்ளது. இதன் காரணமாக, நேட்டோ அமைப்பு தனது வான் பாதுகாப்புகளை அசுர வேகத்தில் பலப்படுத்தியுள்ளது!
டென்மார்க், ஸ்பெயினில் ஒரே இரவில் அடுத்தடுத்த டிரோன் ஊடுருவல்கள்!
நேற்று இரவு டென்மார்க்கின் பல இராணுவத் தளங்கள் மீது மீண்டும் பல டிரோன்கள் அத்துமீறிப் பறந்தன. இதுமட்டுமின்றி, இன்று காலை ஸ்பெயின் தீவு ஒன்றின் விமான நிலையம் அருகே இதேபோன்ற டிரோன்கள் காணப்பட்டதைத் தொடர்ந்து, பல விமானங்கள் திசை திருப்பி விடப்பட்டன.
முந்தைய நாள், டென்மார்க்கின் மிகப்பெரிய இராணுவத் தளத்தின் மீதும் சந்தேகத்திற்குரிய டிரோன்கள் பறந்த சம்பவத்தின் எதிரொலியாகவே, இந்தப் புதிய ஊடுருவல்கள் வந்துள்ளன.
நேட்டோவின் அதிரடி நடவடிக்கை! – பால்கன் கடலில் பதற்றம்!
தொடர்ந்து நடக்கும் இந்த அத்துமீறல்களை அடுத்து, நேட்டோ தனது வான் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளது. குறிப்பாக, ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள பால்கன் கடலில் (Baltic Sea) நேட்டோ தீவிர எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளது.
நேட்டோ செய்தித் தொடர்பாளர் மார்ட்டின் ஓ’டொனெல் கூறுகையில், “இந்த ஊடுருவல்களைத் தொடர்ந்து, நாங்கள் பல உளவு, கண்காணிப்பு மற்றும் ஆய்வு தளங்களை (ISR) பணியமர்த்தியுள்ளோம். அத்துடன், இப்பகுதியில் குறைந்தபட்சம் ஒரு வான் பாதுகாப்புப் போர்க்கப்பல் (Air-Defence Frigate) நிறுத்தப்பட்டுள்ளது,” என்று உறுதிப்படுத்தினார்.
ரஷ்யாவின் “நிழல் கடற்படை” மீது சந்தேகம்!
இந்த டிரோன்களை நேட்டோவின் வான்வெளிக்குள் ஏவுவதற்கு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் “நிழல் கடற்படையைச் (Shadow Fleet)” சேர்ந்த மூன்று சந்தேகத்திற்குரிய ரஷ்யக் கப்பல்கள் உதவியிருக்கலாம் என்று அதிகாரிகள் தற்போது தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இது ஒரு பெரிய நாசவேலைத் திட்டத்தின் பகுதியாக இருக்கலாம் என்ற சந்தேகம் வலுக்கிறது.
டென்மார்க்கில் அதிநவீன ரேடார் நிறுவல்!
தொடர் அத்துமீறல்களைத் தடுக்க, டென்மார்க் தனது கோபன்ஹேகன் விமான நிலையத்தில் XENTA-M5 என்ற அதிநவீன டிரோன் ரேடாரை நிறுவியுள்ளது. இந்த ரேடார் மூலம் முப்பரிமாண (3D) வான்வெளி கண்காணிப்பு சாத்தியமாகும் என்றும், இது இராணுவ அச்சுறுத்தல்களை உடனுக்குடன் அடையாளம் காண உதவும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பால்கன் கடலில் கண்காணிப்பை பலப்படுத்த, நேட்டோ வான் பாதுகாப்புப் போர்க்கப்பலான FGS Hamburg F220 டென்மார்க்கின் கோபன்ஹேகன் துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. “இந்தக் கப்பலின் இருப்பு, நேட்டோ உறுப்பு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமையின் தெளிவான சிக்னலை அனுப்புகிறது,” என்று நேட்டோ கடற்படைத் தளபதி அர்லோ ஆபிரஹாம்சன் கூறியுள்ளார்.
மர்ம டிரோன் ஊடுருவல்களுக்குப் பின்னால் இருக்கும் உண்மையான சதி என்ன? ரஷ்யாவின் ‘நிழல் கடற்படை’க்கும் இதற்கும் தொடர்பு இருக்கிறதா? உலக நாடுகள் இந்தப் பரபரப்பான திருப்பத்தை உற்றுநோக்குகின்றன!