UK could face up to £30bn of tax rises to fund defence
ரஷ்யா தாக்கக் கூடும் என்ற அச்சத்தில், இங்கிலாந்து 30 பில்லியன் பவுண்டுகளை நிதியாக திரட்ட ஆரம்பித்துள்ளது. இது வேறு எங்கிருந்தும் இல்லை. மக்களிடம் மேலும் வரிகளைப் போட்டு இந்த பணத்தை திரட்டி. அதனை பாதுகாப்பு செலவுக்கு பயன்படுத்த அரசு திட்டம் ஒன்றை தீட்டியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
ஏற்கனவே வட்டியை பல மடங்காக அதிகரித்துள்ள பிரித்தானியா அரசு, அதனை குறைத்த பாடாக இல்லை. நாளுக்கு நாள் பிரித்தானியாவில் அத்தியவசிய பொருட்களின் விலை ஏறிக் கொண்டு செல்கிறது.
மக்கள் திண்டாடி தெருப் பொறுக்கி வருகிறார்கள். மக்களிடம் பணம் இல்லாததால், கடைகளில் அவர்கள் திருட ஆரம்பித்துள்ளதால். கொரோனாவுக்கு பின்னர் திருடுவது 300% மடங்காக அதிகரித்துள்ளது. லண்டனில் இனி வாழ முடியுமா என்ற அச்சத்தில் மக்கள் இருக்கிறார்கள். அது போல பலர் லண்டனை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் குடியேற ஆரம்பித்தும் விட்டார்கள்.
இந்த நிலையில் தான் இந்த 30 பில்லியன் பவுண்டுகள் நிதி, அறிவிப்பு வந்துள்ளது. எந்த வரியை இனி மக்கள் மீது போட்டு இந்தப் பணத்தை சேகரிக்கப் போகிறார்களோ தெரியவில்லை. -“”நாயை அடிப்பான் ஏன் பீ….. சுமப்பான் ஏன்”” ? என்பார்கள். அதுபோல உக்ரைனுக்கு உதவுகிறேன் என்று ரஷ்யாவோடு பகையை வளர்த்து. தற்போது பயத்தில் பாதுகாப்பு பட்ஜெட்டை கூட்டி, அதில் மேலும் 30 பில்லியனை ஒதுக்கி, அதனை மக்கள் மீது வரியாக போட உள்ளது பிரிட்டன் அரசு …