சற்று முன்னர், இரவில் ஈரான் இஸ்ரேல் மேல் பலஸ்டிக் ஏவுகணைகலை பொழிந்து தள்ள ஆரம்பித்துள்ளது. மழை போல வானில் இருந்து இஸ்ரேலுக்குள் பல ஏவுகணைகள் விழுந்து வெடித்துள்ளது. இதேவேளை இஸ்ரேலின் அயன் டோம் என்று சொல்லப்படும், வான் பாதுகாப்பு செயல் இழந்து வருகிறது. ஈரான் ஒரு புதிய பொறி முறையை கையாள ஆரம்பித்துள்ளது. அது என்னவென்றால்…
முதலில் சில ஏவுகணைகளை அனுப்பி, வான் பாதுகாப்பு சிஸ்டத்தை தடுமாறச் செய்து விட்டு. பின்னர் சடுதியா அதி சக்திவாய்ந்த பலஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் ஏவுகிறது. இதனால் முன்னர் வந்த ஏவுகணைகளை தாக்கி அழுத்துக் கொண்டு இருக்கும் சிஸ்டம், பின்னர் வரும் ஏவுகணைகள் சிலவற்றை கோட்டை விடுகிறது. எனவே அதில் வரும் அதி சக்த்தி வாய்ந்த ஏவுகணைகள் இஸ்ரேல் நிலைகளை தாக்கி அழிக்கிறது.
ஈரான் நடத்திய தாக்குதலால் பல நூறு பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில். இஸ்ரேலின் ராணுவத் தலைமையகம் முற்றாக அழிந்துள்ளது. இதனால் கடும் ஆதிரமடைந்த இஸ்ரேல் அதிபர் நித்தின்யா ஹூ, ஈரான் இனி பற்றி எரியும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீனா பல ஆயுதங்களை ஈரானுக்கு அள்ளி வழங்கியுள்ளதாக தற்போது தெரிவிக்கப்படுகிறது. காரணம் ஈரான் ஏவும் ஏவுகணைகள் பல இஸ்ரேலின் அயன் டோம் எனப்படும் வான் பாதுகாப்பு சிஸ்டத்தை கடந்து உள்ளே வந்து வெடிக்கிறது. இது எப்படிச் சாத்தியம் என்பது இஸ்ரேலுக்கு தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. இதேவேளை ஈரானுக்கு ரஷ்யாவும் ஆயுதங்களை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.