ஈரான் ரகசியமாக கட்டி வைத்திருக்கும் FORDOW என்ற அணு நிலையத்தை, பங்கர் பேஸ்டர் குண்டுகளை பாவித்து அழிக்க முடியும் என்று நினைத்த ரம் தலையில் பெரும் இடி விழுந்துள்ளது. காரணம் ஈரான் அணு நிலையத்தை வெறும் பங்கர் பேஸ்டர் குண்டுகளால் அழிக்க முடியாது. அணு குண்டைப் பாவித்தால் மட்டுமே அழிக்க முடியும் என்று அமெரிக்க ராணுவ ஜெனரல் ரம்புக்கு தெரிவித்துள்ளார். மலைகளை குடைந்து, அவர்கள் அதன் அடியில் இந்த நிலையத்தை கட்டி எழுப்பியுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.
ஈரான் மீது அணு குண்டை வீசினால், அதன் விளைவுகள் மிக மோசமாக இருக்கும் என்று சற்று முன்னர் ரஷ்ய அதிபர் புட்டின் கடுமையாக மிரட்டியுள்ளார். இன் நிலையில் இஸ்ரேல் எடுத்த அனைத்து முயற்ச்சிகளும் தோல்வியடைந்துள்ளது. காரணம் அவர்கள் இது நாள் வரை ஈரானின் அணு மின் நிலையங்களையே தாக்கியுள்ளார்கள். அணு குண்டை தயாரிக்க வல்ல தளத்தை அவர்களால் தாக்கி அழிக்கவே முடியவில்லை.
இந்த நிலையில் 200 போர் விமானங்களை ஈரானுக்குள் அனுப்பி, இஸ்ரேல் எதனை அழித்தது ? என்று கேட்டால் உண்மையில் இஸ்ரேல் பெரும் தோல்வியடைந்துள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள். ஈரானை படை பலம் கொண்டு கைப்பறுவது என்பது முடியாத காரியம். இயற்கையாகவே அதற்கு மலைகள் அரணாக இருக்கிறது.
படை பலத்தை எடுத்துக் கொண்டால், ஈரானில் 5 லட்சம் பேர் ராணுவத்தில் உள்ளார்கள். மேலும் 2 லட்சம் பேர் துணைப் படையில் உள்ளார்கள். இந்த நிலையில் ஈரானின் அணு சக்த்தி நிலையம் இன்றுவரை தாக்குதலுக்கு உள்ளாகாமல் தப்பி இருக்கிறது என்பதே உண்மை நிலை. இதனால் அமெரிக்கா என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறி வருகிறது.