கீழே வீடியோ இணைப்பு: Warning video is FATAL
இந்தியாவின் அகமதாபாத் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் கட்-விக் விமான நிலையம் நோக்கிப் பறக்க ஆரம்பித்த AIR-INDIA 171 போயிங் விமானம் புறப்பட்டு சுமார் 1 நிமிடத்திலேயே கட்டுப்பாட்டை இழந்து கட்டத்தோடு மோதி வெடித்துள்ளது. இதுவரை 30 உடல்களை மட்டுமே கண்டு பிடிக்க முடிந்தது. இதில் 242 பயணிகள் இருந்துள்ளார்கள். இவர்கள் அனைவருமே இறந்து விட்டார்கள்.
இதில் 53 பேர் பிரிட்டன் பிரஜைகள் என்றும். சில தமிழர்களும் பட்டியலில் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஈழத் தமிழர்களும் இதில் அடங்குகிறார்களா என்பது தெரியவில்லை. இது இவ்வாறு இருக்க விமானத்தின் 2 எஞ்சின்களும் , திடீரென செயல்படாமல் போனதே விபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது. பொதுவாக போயிங் விமானத்தை பொறுத்தவரை , ஒரு எஞ்சின் இயங்கா விட்டாலும் மற்றைய எஞ்சினை கடுமையாக இயக்கி, விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்க முடியும்.
ஆனால் இங்கே பார்த்தீர்கள் என்றால், விமானம் நேரடியாக திடீரென தரை தட்டியுள்ளது. மேலும் அதிக தூரம்(லண்டன்) பறக்க இருந்ததால் விமானத்தில் அதிக அளவில் எரிபொருள் இருந்துள்ளது. இதன் காரணத்தால் விமானம் பற்றி எரிய ஆரம்பித்துள்ளது. பலர் கருகி இறந்துள்ள நிலையில். ஒரு கட்டடம் ஒன்றில் 30 பேரின் சடலத்தை மீட்ப்பு பணியாளர்கள் கண்டு பிடித்துள்ளார்கள். இது…
விமானத்தின் முன் பகுதியில் இருந்தவர்களாக இருக்க கூடும் என்று கூறப்படுகிறது. இந்தியா மட்டும் அல்ல உலக வரலாற்றில் இது ஒரு மிகவும் சோகமான நாள். விமானத்திற்கு என்ன நடந்தது. கடைசி செக்கனில் விமானிகள் என்ன தெரிவித்தார்கள் ? இது எப்படி நடந்தது ? Safety Check எல்லாமே சரியாக நடந்ததா ? இவை அனைத்தையும் ஆராயவேண்டி உள்ளது. இந்தியா இதனை தேசிய துக்க வாரமாக அறிவிக்குமா என்பது தெரியவில்லை !