கீழே வீடியோ இணைப்பு
28 வருடங்கள் கழித்து(28 Years Later) என்ற இந்தப் படம் இன்று வெள்ளிக் கிழமை(20) வெளியாகியுள்ளது. ஆனால் படம் திரைக்கு வர முன்னரே இதனைப் பற்றி உலகமே பேச ஆரம்பித்து விட்டது. என்ன ஒரு கதை… இப்படியும் நடக்குமா ? என்று மக்களை திணறவைக்கும் ஸ்டோரி லைன், படமாக்கப்பட்ட விதம்… காட்சிகள், மேலும் சொல்லப் போனால் திகில் சம்பவங்கள். அதற்காக அவர்கள் தெரிவு செய்த நடிகர்கள்… என்று படம் செக்கனுக்கு செக்கன் புரட்டி எடுக்கிறது.
கொரோனா போல ஒரு வகை கிருமியால் பாதிக்கப்பட்ட மக்கள், அவர்களால் பரவும் தொற்று. இது கிருமி என்று நினைத்துக் கொண்டு இருக்க அது கிருமியே அல்ல… வேறு ஒன்று என கண்டு பிடிக்கும் சில மனிதர்கள். ஒரு தனித் தீவில் மட்டும் சில மக்கள் தப்பி வாழ்வதும். அவர்கள் எப்படி தம்மை காத்துக் கொள்கிறார்கள் என்பதும் படமாக்கப்பட்ட விதமே தனி.
சூப்பர் டூப்பர் ஹாலிவுட் திரைப்படமாக இது இருக்கிறது. வசூலை அள்ளிக் குவிக்கவும் உள்ளது என்பது நிச்சயமாகத் தெரிகிறது. எப்படி ஒரு படத்தை எடுக்க வேண்டும் என்பதனை இந்த திரைப்படம் காட்டியுள்ளதோடு. தமிழ் இயக்குனர்களுக்கு இது ஒரு பாடமாக அமையவும் உள்ளது. ஆங்கிலேயர் எப்படி எல்லாம் படத்தை எடுக்க, எங்கள் தமிழ் இயக்குனர்கள் மொக்கை படங்களை எடுத்து அலைந்து திரிவது பற்றி நன்றாகப் புரியும்.
இந்தக் கதையை மட்டும் 5 ஆண்டுகளாக எழுதி, பின்னர் திருத்தி பின்னர் சரி செய்து இறுதியில் படமாக்கியுள்ளார்களாம். பாருங்கள் எப்படி எல்லாம் திட்டம் போட்டு படத்தை எடுக்கிறார்கள் என்று.