தளபதி விஜய்யின் திரையுலகப் பயணத்தின் கடைசிப் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படம் குறித்த புதிய மற்றும் அதிரடியான தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், கே.வி.என். நிறுவனம் பிரம்மாண்டமாகத் தயாரிக்கும் இப்படத்தில், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பாபி தியோல், நரேன், கவுதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். ராக்ஸ்டார் அனிருத் இசையமைக்கும் இந்தப் படம், விஜய்யின் கடைசிப் படம் என்பதால், ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரையரங்க ரிலீஸ் உரிமை யாருக்கு?
இந்நிலையில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் தமிழ்நாடு திரையரங்க வெளியீட்டு உரிமையை ஒரு பிரபல நிறுவனம் மிக அதிக விலைக்குக் கைப்பற்றியுள்ளதாகத் தகவல் கசிந்துள்ளது.
அதன்படி, ரோமியோ பிக்சர்ஸின் ராகுல் அவர்கள், ‘ஜனநாயகன்’ படத்தின் தமிழ்நாடு திரையரங்க ரிலீஸ் உரிமையை வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.