Posted in

கடல் கடந்த சாகசம்: எரித்திரியாவில் சிறைபிடிக்கப்பட்ட இலங்கைக் கடலோடிகள் தாயகம் திரும்பினர்!

கடல் கடந்த இன்னலில் சிக்கி தவித்த 6 இலங்கை கடலோடிகள், ஒரு வழியாக மீட்கப்பட்டுநேற்றைய தினம் தாயகம் திரும்பினர்!

மர்மமான முறையில் எரித்திரியா நாட்டில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இந்த 6 பேரும், பல மாத கால இழுபறிக்குப் பிறகு, அரசாங்கத்தின் தீவிர இராஜதந்திர முயற்சிகள் மற்றும் உரிய அதிகாரிகளின் கடுமையான உழைப்பின் பலனாக பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

அவர்களது குடும்பத்தினரின் கண்ணீரும், ஏக்கமும் இன்று நீங்கியது! கொழும்பு விமான நிலையத்தை வந்தடைந்த கடலோடிகளை, வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும் உறவினர்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.

எரித்திரிய கடற்பரப்பில் அத்துமீறியதாகக் கூறி இவர்கள் கைது செய்யப்பட்டதாக முன்னர் தகவல்கள் வெளியாகியிருந்தன. விடுவிக்கப்படுவார்களா? எப்போது திரும்புவார்கள்? என்ற கேள்விகள் மத்தியில் இந்த மீட்ப்பு செய்தி பெரும் நிம்மதியை அளித்துள்ளது.