Posted in

வங்கதேசத்துக்கு விழுந்த கடைசி ‘கிடுக்கிப்பிடி’! இந்தியா வரலன்னா வேர்ல்ட் கப் காலி – ஐசிசி அதிரடி

இந்தியாவில் நடக்கப்போற 2026 டி20 வேர்ல்ட் கப் (T20 World Cup) தொடர்ல வங்கதேச அணி விளையாடுமா இல்லையான்ற ‘Confusion’ இப்போ பீக்ல இருக்கு. “இந்தியா வந்து விளையாட முடியாதுன்னா பேசாம வீட்டிலேயே இருங்க”ன்னு ஐசிசி (ICC) ஏற்கனவே வார்னிங் கொடுத்திருந்தது. நேத்து ஜனவரி 21-தோட கெடு முடிஞ்ச நிலையில, இப்போ கடைசி சான்ஸா (Last Chance) இன்னும் ஒரு 24 மணி நேரம் மட்டும் ‘Deadline’ நீட்டிக்கப்பட்டிருக்கு. இன்னைக்குள்ள அவங்க ஒரு முடிவை சொல்லலன்னா, வங்கதேச டீம் டிஸ்மிஸ் செய்யப்படுறது கன்பார்ம்.

நேத்து நடந்த ஐசிசி எமர்ஜென்சி மீட்டிங்ல (Emergency Meeting) வங்கதேசத்துக்கு ஒரு பெரிய அதிர்ச்சி காத்துகிட்டு இருந்தது. “எங்க மேட்ச்சஸ் எல்லாம் இலங்கைக்கு மாத்துங்க”ன்னு வங்கதேச கிரிக்கெட் போர்டு கேட்டதுக்கு, ஐசிசி மெம்பர்ஸ் மத்தியில ஒரு ஓட்டிங் (Voting) நடத்தப்பட்டது. மொத்தம் இருந்த 16 ஓட்டுல, 14 பேர் “அட்டவணையை மாத்தவே கூடாது”ன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டாங்க. வெறும் ரெண்டே ரெண்டு பேருதான் அவங்களுக்கு சப்போர்ட் பண்ணாங்க. இதனால “இலங்கை ஆப்ஷன் இப்போதைக்கு கிடையாது, இந்தியா வந்தா மட்டும் தான் வேர்ல்ட் கப்”னு ஐசிசி மொட்டையா சொல்லிட்டாங்க.

ஒருவேளை இன்னைக்கு (ஜனவரி 22) வங்கதேசம் அதே பிடிவாதத்துல இருந்தா, குரூப் சி (Group C) பிரிவில இருந்து அவங்களை தூக்கிட்டு, அந்த இடத்துக்கு ஸ்காட்லாந்து (Scotland) டீமை உள்ள கொண்டு வர ஐசிசி பிளான் பண்ணிட்டாங்க. இது அந்த நாட்டு பிளேயர்ஸ் மத்தியில பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கு. கேப்டன் லிட்டன் தாஸ் ரொம்ப விரக்தியா, “நாங்க விளையாடுவோமா இல்ல டிவியில மேட்ச் பார்ப்போமான்னே தெரியல”ன்னு புலம்பித் தள்ளுறாரு.

ஒரு பக்கம் அரசியல், இன்னொரு பக்கம் கிரிக்கெட் பாலிடிக்ஸ்னு வங்கதேசம் இப்போ செமயா சிக்கிக்கிட்டு இருக்கு. கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் (Eden Gardens) மற்றும் மும்பை வான்கடே ஸ்டேடியத்துல அவங்களுக்கு மேட்ச்சஸ் பிக்ஸ் பண்ணிருக்காங்க. ஆனா, பிசிசிஐ (BCCI) மற்றும் ஐசிசி-யோட இந்த அதிரடி ஆட்டத்தால வங்கதேச கிரிக்கெட்டே இப்போ ‘Danger Zone’ல இருக்கு. இன்னைக்கு நைட்டுக்குள்ள அந்த ‘Final Decision’ என்னன்றது தெரிஞ்சுடும்.

For the past two decades, Mr. Kannan has served as the Editor of Athirvu News. A veteran of the diaspora, he stands as a highly respected and seasoned journalist, shaping the voice of the Tamil community for over 20 years.