Posted in

“அண்ணனை நம்ப வேண்டாம்!” – டிடிவி பற்றி விஜய் போட்ட கணக்கு! அரசியலில் ‘தளபதி’ காட்டும் தீர்க்கதரிசனம்

தவெக (TVK) கூடாரத்துல இப்போ செங்கோட்டையன் வரவுக்கு அப்புறம் ஏகப்பட்ட மூவ்மென்ட்ஸ் (Movements) நடந்துட்டு இருக்கு. அண்ணன் செங்கோட்டையன் கட்சிக்குள்ள வந்த புதுசுல, அதிமுகவோட பழைய புள்ளிகளான ஓபிஎஸ் (OPS) மற்றும் டிடிவி தினகரன் (TTV) ஆகியோரையும் தவெக-ல இணைக்கலாம்னு ஒரு ஐடியா கொடுத்தாராம். பொங்கலுக்கு அப்புறம் பெரிய ‘Induction’ நடக்கும்னு அவர் சொன்னதுக்கு பின்னணியில இந்த பிளான் இருந்ததா சொல்லப்படுது. ஆனா, நம்ம ‘தளபதி’ விஜய் இதுல ரொம்பவே தெள்ளத்தெளிவா இருந்திருக்காரு. ஊழல் வழக்குகள்ல சிக்கினவங்களை கட்சிக்குள்ள சேர்த்தா, அது தவெக-வோட ‘Corruption-free’ இமேஜை டேமேஜ் பண்ணிடும்னு விஜய் உறுதியா சொல்லிட்டாராம்.

இந்த விவாதங்கள் நடந்தப்போ, “டிடிவி தினகரன் ஒரு சந்தர்ப்பவாதி (Opportunistic)”னு விஜய் ஓப்பனாவே கமெண்ட் அடிச்சதா ஒரு பேச்சு ஓடுது. அவர் நம்ம கூட இணையப்போறதா ஒரு வதந்தியை (Rumors) கிளப்பிவிட்டு, அதை வச்சு அதிமுக-வோட ஒரு டீலிங் (Dealing) பேசி அங்கேயே செட்டில் ஆகிடுவாருன்னு விஜய் அப்பவே கணிச்சிருக்காரு. விஜய் சொன்ன மாதிரியே இப்போ டிடிவி தினகரன் அதிமுக-பிஜேபி கூட்டணியில ஒட்டிக்கிட்டாரு. “கணிப்புல தளபதி எப்பவுமே கில்லி தான்”னு தவெக தொண்டர்கள் இப்போ காலரைத் தூக்கி விட்டுக்கிறாங்க.

அதே மாதிரி ‘ஜன நாயகன்’ பட ரிலீஸ் மேட்டர்லயும் விஜய் இப்போ ரொம்ப ‘சைலண்ட்’டா இருக்குறதுக்கு பின்னாடியும் ஒரு காரணம் இருக்கு. வேற எந்த ஹீரோவா இருந்தாலும் இந்நேரம் பிரஸ் மீட் (Press Meet) வச்சு ரணகளம் பண்ணிருப்பாங்க. ஆனா, விஜய் ரொம்ப கூலா இருக்குறதுக்குக் காரணம், இதெல்லாம் நடக்கும்னு அவருக்கு முன்னாடியே தெரியும். படத்தோட தயாரிப்பாளருகிட்ட ஷூட்டிங் அப்பவே, “இந்த படம் வந்தா கண்டிப்பா அரசியல் நெருக்கடி வரும், ரிலீஸ் அப்போ பஞ்சாயத்து நடக்கும்… நீங்க இதுக்கு ரெடியா?”னு கேட்டுட்டு தான் வேலையையே ஆரம்பிச்சிருக்காரு.

விஜய்க்கு வரப்போற பிரச்சனைகளை முன்கூட்டியே மோப்பம் பிடிக்கிற சக்தி அதிகமாவே இருக்கு. அதனாலதான் டிடிவி விவகாரமா இருந்தாலும் சரி, ‘ஜன நாயகன்’ தடையா இருந்தாலும் சரி, அவர் எதற்கும் அலட்டிக்காம தன்னோட ‘Secret Plan’ படி மூவ் பண்ணிட்டு இருக்காரு. எதிரிகள் போடுற ஸ்கெட்ச்சை விட, விஜய் போட்டு வச்சிருக்கிற ‘Future Sketch’ ரொம்ப ஸ்ட்ராங்கா இருக்குறதுனால தான் இப்போ கோலிவுட் முதல் கோட்டை வரை எல்லாரும் விஜய்யோட அடுத்த மூவ் என்னவா இருக்கும்னு ஆவலோட வெயிட் பண்றாங்க.

For the past two decades, Mr. Kannan has served as the Editor of Athirvu News. A veteran of the diaspora, he stands as a highly respected and seasoned journalist, shaping the voice of the Tamil community for over 20 years.