ஐரோப்பாவிற்கான NATO அதி உச்ச தளபதியாக அமெரிக்கர் நியமனம்

ஐரோப்பாவிற்கான நேட்டோவின் புதிய உச்ச தளபதியாக ஒரு அமெரிக்க ஜெனரலை அமெரிக்கா நியமித்துள்ளது. இது, நேட்டோ நிறுவப்பட்டதிலிருந்து வாஷிங்டன் வகித்து வந்த ஒரு முக்கியப் பதவியை விட்டுக்கொடுக்கும் என்ற அச்சத்தைப் போக்கியுள்ளது.

வான்படை ஜெனரல் அலெக்ஸஸ் க்ரின்ஜெவிச் (Alexus Grynkewich) ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, நேட்டோவின் 32 நட்பு நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டதாக அமெரிக்க பாதுகாப்புத் துறை மற்றும் நேட்டோ அறிக்கைகளில் தெரிவித்துள்ளன.

இந்த நியமனம் – இது இப்போது அமெரிக்க செனட்டால் உறுதிப்படுத்தப்பட வேண்டும் – சீனா மீது கவனம் செலுத்த ஐரோப்பாவில் இருந்து படைகளை மாற்றியமைக்க வாஷிங்டன் பரிசீலிக்கும் என்று எச்சரித்த வேளையில் வந்துள்ளது.

ட்ரம்ப் நிர்வாகம், 1950களின் முற்பகுதியில் டுவைட் டி. ஐசனோவர் (Dwight D. Eisenhower) முதன்முதலில் வகித்த ஐரோப்பாவிற்கான நேட்டோ உச்ச தளபதி (SACEUR) பதவியை விட்டுக்கொடுப்பதைக் கருத்தில் கொண்டிருப்பதாக அமெரிக்க செய்தி நிறுவனமான NBC மார்ச் மாதம் செய்தி வெளியிட்டது.

அமெரிக்கா இந்த பதவியைத் துறக்கும் சாத்தியக்கூறுகளை நேட்டோ இராஜதந்திரிகள் குறைத்து மதிப்பிட்டனர். இது ஐரோப்பாவில் கூட்டணியின் செயல்பாடுகளிலிருந்து அமெரிக்கா திறம்பட விலகுவதைக் குறிக்கும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

ரஷ்யாவிற்கு எதிரான உக்ரைனின் போருக்கு மேற்கத்திய நாடுகளின் முயற்சிகளுக்குத் தலைமை தாங்கி, மாஸ்கோவை எதிர்த்து நேட்டோவின் சொந்த திறன்களை வலுப்படுத்திய கிறிஸ்டோபர் காவோலிக்கு (Christopher Cavoli) பதிலாக க்ரின்ஜெவிச் நியமிக்கப்பட்டுள்ளார்.