PRAX முதலாளி சஞ்ஜீவ் குமார் இலங்கைக்கு தப்பி ஓடினார்: 1.5B £ ஆட்டை !

PRAX முதலாளி சஞ்ஜீவ் குமார் இலங்கைக்கு தப்பி ஓடினார்: 1.5B £ ஆட்டை !

இலங்கையைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஆரணி ஆகியோர் இலங்கைக்குத் தப்பிச் சென்றுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவர்கள் இருவரும் இணைந்து ‘பாரக்ஸ்’ (Parx) என்ற பெயரில் பிரிட்டனில் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையைத் தொடங்கினர். இதன் மூலம் பில்லியன் கணக்கான பவுண்டுகளைப் பணப் பரிவர்த்தனை செய்து வந்தனர்.

ஆனால் கடந்த சில மாதங்களாக, நிறுவனம் நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறி, நிறுவனத்தைக் கைவிட்டு நாட்டிலிருந்து தப்பிச் சென்றுள்ளனர். குறிப்பாக, இவர்களது நிறுவனம் சுமார் 1.5 பில்லியன் பவுண்டுகள் கடனில் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், சஞ்சீவ் மற்றும் ஆரணி இருவரும் பெரும் தொகைப் பணத்துடன் இலங்கைக்குத் தப்பிச் சென்றுள்ளனர்.

இலங்கை, பல ஆண்டுகளாகப் பெரிய குற்றவாளிகளின் புகலிடமாக மாறியுள்ளது. ரஷ்யக் குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் கும்பல்கள், தேடப்படும் கொலைக் குற்றவாளிகள் எனப் பலர் இலங்கையில் அரசாங்கத்தின் உதவியுடன் தங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரித்தானியப் போலீசார் தற்போது இவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், இவர்கள் இருவரும் திட்டமிட்டே இந்த நிறுவனத்தைத் தொடங்கி நடத்தி, பெரும் தொகைப் பணத்தைக் கையாடல் செய்து, இறுதியில் நிறுவனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் இருவரும் பெரிய மூளைக்காரர்கள் (Masterminds) என்றும் கூறப்படுகிறது.