நேற்றைய தினம், இஸ்ரேல் சுமார் 200 போர் விமானங்களை, சொலுத்தி ஈரான் நிலைகள் மீது பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தி இருந்தது. இதில் ஈரானின் ராணுவத் தளபதி உட்பட பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். மேலும் அணு ஆயுத நிலையங்கள் மீதும் இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன் காரணத்தால் ஈரானில் கதிரியக்க துகள்கள் காற்றில் பரவியுள்ளதை, ஐ.நாவின் சாட்டலைட் துல்லியமாக அறிந்துள்ளது. இதனால் ஐ.நா கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஈரானின் அனைத்து தலைவர்களும் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ள நிலையில். ஈரான் பல நூறு ஏவுகணைகளை ஒன்றாக ஏவி, இஸ்ரேலின் இருப்புக் கோட்டையை தற்காலிகமாக செயல் இழக்கச் செய்துள்ளது.
ஈரானின் பல ஏவுகணைகளை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு சுட்டு வீழ்த்தி இருந்தாலும், பல ஏவுகணைகள் இஸ்ரேலை தாக்கியுள்ளதாக சற்று முன்னர் கிடைக்கும் தகவல் தெரிவிக்கின்றன.