பிரித்தானியாவில் குடியேறும் நபர்களுக்கு மேலும் ஆப்படித்துள்ளார் பிரதமர் கியர் ஸ்டாமர். கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 1 லட்சம் பேர் பிரித்தானியாவினுள் அகதிகளாக நுளைந்துள்ளதாக பிரதமர் தெரிவித்துள்ளார். இதனால் சுகாதார சேவை, குடிமனை வாரியம், என்று பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும். இவர்களை பராமரிக்க மக்கள் வரிப்பணம் செலவாகிறது என்றும், பிரித்தானிய பிரதமர் சாடியுள்ளார்.
பிரித்தானியாவில் குடியேறவேண்டும் என்றால், குறைந்த பட்சம் 10 வருடங்கள் ஆவது செல்லும் என்றும். இதேவேளை அவர்கள் தங்களை ஒரு நல்ல குடி மக்களாக முதலில் மாற்றவேண்டும். மிகவும் திறமையாக ஆங்கிலம் பேச தெரிந்திருக்க வேண்டும். ஒரு பெருமளவும் வரியை அவர்கள் 10 வருடங்களில் செலுத்தி இருக்க வேண்டும் என்று இப்படி பல விடையங்களை பிரித்தானிய அரசு கொண்டு வந்துள்ளது.
இவை அனைத்தும் சரி என்றால் மட்டுமே, நிலந்தர வதிவிட உரிமைக்கு விண்ணப்பிக்க முடியும். இல்லையென்றால் வருடங்கள் தான் நீண்டு கொண்டு போகும் ஆனால் வதிவிட உரிமை கிடையாது. இப்படி பல சட்ட திட்டங்களை உடனடியாக பிரித்தானியா கொண்டுவர உள்ளதாக அன் நாட்டு பிரதமர் கியர் ஸ்டாமர் தெரிவித்துள்ளார்.