London Harrow சம்பவம்: ஏன் குத்தினான் எதற்கு குத்தினான் தெரியவில்லை பாருங்கள்

வெறும் 17 வயதாகும் கெவின் என்னும் இளைஞர், வீதியில் நடந்து வந்துகொண்டு இருந்த 36 வயது நபரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளான். அன் நபரை கெவினுக்கு முன்னர் தெரியாது. பழக்கமும் இல்லை. ஆனால் இன்றுவரை ஏன் குத்தினேன் என்ற விபரத்தை அவர் நீதிமன்றில் ஒப்புக்கொள்ளவில்லை. ஆனால் அந்த 36 வயது நபர் துடி துடித்து இறந்து விட்டார். இந்த கெவின் என்னும் 17 வயது இளைஞருக்கு மன நிலை சூப்பராக உள்ளது.

Kensal Rise என்னும் இடத்தில் சம்பவ தினத்தில் நின்றுகொண்டு இருந்த கெவின், நடந்து வந்த 36 வயது நபருடன் ஏதோ பேசியுள்ளான். பின்னர் அவரை பின் தொடர்ந்து சென்று கத்தியை எடுத்து அவர் மார்பில் பலமாக குத்தியுள்ளான். இதனால் சம்பவ இடத்தில் அன் நபர் பலியாகியுள்ளார்.

இவை அனைத்துமே CCTVல் தெளிவாக பதிவாகியுள்ள நிலையில். கெவின் முகத்தை துல்லியமாக பதிவு செய்த பொலிசார் அதனை தமது தேடுதல் டேட்டா பேசில் போட, 6 நாட்கள் கழித்து, கெவின் Kenton Park Crescent, Harrow, நடந்து செல்வது பொலிசாரின் CCTV கமராவில் அலேட் ஆனது.

இதனை அடுத்து பெரும் பொலிஸ் கூட்டமே ஹரோவின் அந்த இடத்தை சுற்றி வளைத்து தேடியவேளை கெவின் பொலிசாரிடம் சிக்கிக் கொண்டார். இவர் ஒன்றும் மன நிலை பாதிக்கப்பட்ட நபரே அல்ல. இதனால் தான் பொலிசார் பெரும் குழப்பம் அடைந்துள்ளார்கள்.

ஆனால் குத்தப்பட்ட கத்தி அதில் உள்ள கை ரேகை என்பன ஒத்துப் போகிறது. மேலும் CCTV காட்சிகளும் ஆதாரமாக உள்ளது. இதனால் கெவினுக்கு தண்டனை நிச்சயம். ஆனால் போன அப்பாவி உயிர் திரும்பி வருமா ? தமிழர்களே லண்டன் மிகவும் கெட்டுக் கிடக்கிறது. என் நேரமும் எது வேண்டும் என்றாலும் நடக்கலாம் என்ற நிலை தோன்றியுள்ளது. கத்தியோடு அலைந்தால் குறைந்த பட்சம் 5 வருட சிறை என்ற, அச்சம் யாருக்குமே இல்லை. காரில் ஆப்பிள் வெட்ட வைத்திருந்த கத்தியை கண்டு பிடித்து, குடைச்சல் கொடுக்கும் பொலிசாருக்கு, இது போன்ற நிஜ குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் உள்ளது.