அதிர்ச்சி! திருமணமான ஆசிரியை மாணவனை படுக்கையறையில் வல்லுறவுக்கு உள்ளாக்கிய கொடூரம்

அதிர்ச்சி! திருமணமான ஆசிரியை மாணவனை படுக்கையறையில் வல்லுறவுக்கு உள்ளாக்கிய கொடூரம்

அமெரிக்காவில் ஒரு திருமணமான பெண் ஆசிரியை (34), தனது 11 வயது மாணவனை “பிளே டேட்” என்ற பெயரில் வீட்டுக்கு அழைத்துச் சென்று படுக்கையறையில் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கிய கொடூரம் வெடித்துள்ளது!

அலே பார்ட்ஃபீல்ட் எனும் அந்த ஆசிரியை, போலீசாரிடம் வெறும் 12 வார்த்தைகளில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.  மாணவனுடன் Snapchat-ல் நிர்வாண புகைப்படங்கள் பரிமாறியதோடு, மாதங்களாக சிறுவனுக்கு ₹50,000 க்கும் மேல் பணம் அனுப்பியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

 கைது செய்யும் போது, “அவன் தான் என்னை விடாமல் கேட்டு, தொந்தரவு செய்தான்” என்று, 11 வயது குழந்தையை குற்றவாளியாக காட்ட முயன்ற அந்த ஆசிரியின் அதிர்ச்சிகரமான காரணம் கேட்டு போலீசாரே திகைத்தனர்.

சிறுவனின் பெற்றோர், அவன் நடத்தை சந்தேகமாக இருந்ததால் கைப்பேசியை சோதிக்கையில், ஆசிரியை உடன் இருந்த “அவலான பிளே டேட்” சம்பவங்கள் புலனாகி, உடனே போலீசாரிடம் புகார் அளித்தனர்.

இப்போது அந்த ஆசிரியை மீது Predatory Criminal Assault குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.