லண்டனில் 400 மடங்காக அதிகரித்துள்ள SHOP கொள்ளைகள்

லண்டனில் 400 மடங்காக அதிகரித்துள்ள SHOP கொள்ளைகள்

தமிழர்களே ஜாக்கிரதை… லண்டனில் Sainsbury’s முதல் TESCO, ALDI வரை பல கடைகள், தமது கவுன்டர்களை கண்ணாடிப் பெட்டிக்கு உள்ளே கொண்டு வந்து கொண்டிருக்கிறார்கள்.

அந்த அளவுக்குக் கடைகளில் நடக்கும் கொள்ளைகள் பல மடங்காக அதிகரித்துள்ளது. நாட்டில் பல லட்சம் மக்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். போதாக் குறைக்கு அரசும் வழங்கி வந்த மானியங்களை பல மடங்காகக் குறைத்துள்ளது. முதியவர்களுக்குக் கொடுத்து வந்த மானியங்களில் கூட அரசு கை வைத்துள்ளதால், இளைஞர்கள் மட்டுமல்ல, முதியவர்களும் தமது அன்றாட வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க முடியாமல் திண்டாடி வருகிறார்கள்.

இதனால் இளைஞர், யுவதிகள், முதியவர்கள் என்று அனைவருமே கடைகளில் கொள்ளையடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். 200 பவுண்டுகளுக்கு மேல் ஒரு கொள்ளை நடந்தால்தான், தம்மால் விசாரணை செய்ய முடியும் என்று போலீசாரும் கையை விரிக்க, சாதாரண கடைக்காரர்கள் முதல் பெரிய சூப்பர் மார்க்கெட் வரை தற்போது திண்டாடி வருகின்றன.

இதனால் பல சூப்பர் மார்க்கெட்டுகள், தமது கவுன்டர்களை கண்ணாடிப் பெட்டிக்கு உள்ளே கொண்டுவர ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் உணவுகளையும், அன்றாடம் தேவையான பொருட்களையும் எப்படிப் பாதுகாப்பது? அவற்றை திருடுபவர்கள் திருடிக் கொண்டுதான் இருக்கிறார்கள். இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் தடுமாறுகிறது வர்த்தக சமூகம். இதனால் பெரும் அளவில் பாதிப்படைவது, சிறிய கடைகளை வைத்திருக்கும் நம்மவர்கள் தான்.