கிரிப்ட்டோ நாணயம், மற்றும் கரன்சி என்று கேள்விப்பட்டு இருப்பீர்கள். ஆனால் கிரிப்ட்டோ ஒட்டுண்ணிகள் பற்றி பலர் அறிந்திருக்க மாட்டார்கள். இவை விலங்குகள் மற்றும் மனித உடலை தாக்கும் ஒரு வகை ஒட்டுண்ணி வகையைச் சார்ந்தவை. பொதுவாக அவை குடலுக்குள் சென்றுவிட்டால், போதும். பல்கிப் பெருகி பல மில்லியன்களாக மாறி விடும். இதனாம் மனித நரம்பு மண்டலம் மற்றும் நேய் எதிர்ப்பு சக்த்தி என்பன பாதிப்படைகிறது.
இந்த ஆபத்தான ஒட்டுண்ணிகள் தற்போது பிரித்தானியாவில் 26 பேருக்கு இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால், உலக சுகாதார மையம், பிரித்தானிய சுகாதார திணைக்கள் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இது கொரோனா போல மனிதரில் இருந்து மற்றவர்களுக்கு தொற்றும், எனவும். உணவு ஊடாக மலம் ஊடாக தொற்றும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இதனை அடுத்து அமெரிக்காவில் உள்ள, நவீன சுகாதார நிறுவனம் ஒன்று இதனை எப்படி கட்டுப்படுத்துவது என்பது தொடர்பாக பிரித்தானிய விஞ்ஞானிகளுக்கு சில தகவல்களை அனுப்பி உள்ளார்கள் என்ற செய்தியும் வெளியாகியுள்ளது. புதிது புதிதாக எங்கே இருந்து தான் இப்படியான கிருமிகள் வருகிறது என்பது தெரியவில்லை. ஆனால் நாளுக்கு நாள் இந்த உலகில் பெரும் அச்சுறுத்தல் வந்துகொண்டு தான் இருக்கிறது.
கர்பிணிகள், புற்று நோய் உள்ள நபர்களை இது தாக்கினால், அது மிக பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் மேலும் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.