Posted in

ஸ்டாலின் தொகுதியில் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு – மிரண்டு போன DMK நிர்வாகிகள் !

ஸ்டாலின் தொகுதியில் விஜய்க்கு வரலாறு காணாத வரவேற்பு – மிரண்டு போன DMK நிர்வாகிகள் ! - Image 1

நேற்றைய தினம் (மார்ச் 30) விஜய் பெரம்பூர் தொகுதியில் தனது பிரச்சாரத்தைத் தொடங்கினார். அங்கே ஆயிரக்கணக்கான மக்கள் கூடி அந்த இடமே மக்கள் கடலாகக் காட்சியளித்தது. அங்கிருந்து முதலமைச்சர் ஸ்டாலின் இம்முறை போட்டியிடும் கொளத்தூர் தொகுதிக்கு விஜய் சென்றபோது, அவரது வாகனம் நகரவே முடியாத அளவுக்கு மக்கள் கூட்டம் சூழ்ந்துகொண்டது. மக்கள் அவர் வாகனத்தைத் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்; கொளத்தூர் செல்லச் செல்லக் கூட்டம் அதிகரித்து ஒருகட்டத்தில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியது.

முதலமைச்சர் போட்டியிடும் தொகுதியிலேயே விஜய்க்கு இந்த அளவு கூட்டம் கூடுகிறது என்பது சற்று யோசிக்க வேண்டிய விஷயம் தான். கூடியிருந்தவர்கள் வெறும் ரசிகர் கூட்டமாகத் தெரியவில்லை; அவர்கள் “TVK… TVK…” என்று முழக்கமிட்டபடி விஜய் மீது மிகுந்த அன்பை வெளிப்படுத்தியதாக அங்கிருந்த எமது நிருபர் தெரிவித்தார். இது தொடர்பான காட்சிகள் தினத்தந்தி டிவியிலும் (Thanthi TV) நேரலையாக ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.

மக்கள் வெள்ளம் அலைமோத, விஜய் அங்கே தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். பெண்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்குப் பிரச்சனை மற்றும் போதைப்பொருள் ஒழிப்பு ஆகியவற்றை அவர் முக்கிய ஆயுதங்களாகக் கையில் எடுத்துள்ளார். மேலும், இளைஞர் முன்னேற்றம், பட்டதாரி மாணவர்களுக்கு வேலை கிடைக்கும் வரை உதவித்தொகை மற்றும் மிக முக்கியமாக “தமிழர்களுக்கே தமிழ்நாட்டில் வேலை” என்ற முழக்கத்தையும் முன்வைத்துள்ளார். பிற மாநிலத்தவர் ஆதிக்கத்தைக் குறைத்து, தமிழர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று விஜய் ஆணித்தரமாகத் தெரிவித்துவிட்டார்.

இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது என்றுதான் கூற வேண்டும். இன்றைய சூழலில் அதிமுக, திமுக கூட்டங்களுக்கு 200 ரூபாய் மற்றும் பிரியாணி கொடுத்து ஆட்களை அழைத்து வரும் நிலையில், தவெக தலைவர் விஜய்க்குத் தானாகக் கூடும் மக்கள் செல்வாக்கு தனித்துவமானது. இந்த நிலை நீடித்தால், கொளத்தூரில் ஸ்டாலின் வெல்வாரா அல்லது வரலாற்றில் முதல்முறையாக ஒரு முதலமைச்சரே தோல்வியைத் தழுவுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. விஜய் அடுத்தடுத்து அதிரடிச் சுற்றுப்பயணங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளார்.

குறிப்பாகக் கொளத்தூர் மற்றும் பெரம்பூரில் கூடியவர்கள் வெறும் இளைஞர் பட்டாளம் மட்டுமல்ல; பெண்கள் மற்றும் நடுத்தர வயதினர் பலரும் விஜய் பேசுவதைக் கேட்டு ஆதரவு தெரிவித்தனர். “திமுக ஆட்சி வேண்டுமா?” என்று விஜய் கேட்டபோது, “வேண்டாம்” என்று மக்கள் எழுப்பிய சத்தம் விண்ணைப் பிளப்பதாக இருந்தது. இதுதான் திமுகவுக்குப் பெரும் நடுக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும், மத்திய அரசு “ஜன நாயகன்” பாடலைத் தடை செய்ததற்கும் விஜய்யின் செல்வாக்கு வளர்வதைத் தடுக்க வேண்டும் என்ற எண்ணமே காரணம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும், அரசுத் தடைகளையும் தாண்டி விஜய்க்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. இது மே மாதம் 4-ம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் மிகப்பெரிய மாற்றங்களை ஏற்படுத்தும் என்பதைக் காட்டி நிற்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *