அடுத்த பாலா செல்வராகவனா? கெட்ட வார்த்தையால் திட்டியதால் ஓட்டம் பிடித்த நடிகர்!

அடுத்த பாலா செல்வராகவனா? கெட்ட வார்த்தையால் திட்டியதால் ஓட்டம் பிடித்த நடிகர்!

தமிழ் சினிமாவில் முத்தான இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவும் தனுஷை வைத்து காதல் கொண்டேன் திரைப்படத்தை இயக்கி இயக்குனராக அறிமுகமானார். முதல் படமே மாபெரும் அளவுக்கு வெற்றி பெற்றதை தொடர்ந்து அவர் மிகச்சிறந்த இயக்குனராக பார்க்கப்பட்டார்.

தொடர்ந்து காதல் கொண்டேன் , 7ஜி ரெயின்போ காலனி ,புதுப்பேட்டை, யாரடி நீ மோகினி, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன ,இரண்டாம் உலகம், மாலை நேரத்து மயக்கம் ,என் ஜி கே உள்ளிட்ட பல்வேறு வெற்றி திரைப்படங்களை இவர் இயக்கி பிரபல இயக்குனராக பார்க்கப்பட்டு வந்தார்.

மிகச் சிறந்த இயக்குனராக செல்வராகவன் தற்ப்போது அடுத்த பாலா என விமர்சிக்கப்பட்டு வருகிறார். காரணம், பிரபல நடிகர் ஒருவரை கெட்ட வார்த்தையால் திட்டி அசிங்கப்படுத்தி அவரை படத்தை விட்டு ஓட விட்டுள்ள சம்பவம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. ஆம். பிரபல நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் தான் அவர் .

பாவா லக்ஷ்மணன் புதுப்பேட்டை திரைப்படத்தில் முதலில் கமிட்டாகி கிட்டத்தட்ட இரண்டு நாட்கள் நடித்து வந்தாராம். அந்த சமயத்தில் இவருக்கு நடிப்பை தெரியவில்லை என கூறி சூட்டிங் ஸ்பாட்டில் செல்வராகவன் பாபா லட்சுமணனை பயங்கரமாக கெட்ட வார்த்தையால் திட்டி இருக்கிறார். மனசு கேட்காமல் பாவா லட்சுமணன் ஒரு கட்டத்தில் அந்த படத்தில் இருந்து வெளியேறி விட்டாராம்.

மேலும் செல்வராகம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ள பாபா லக்ஷ்மணன்…. செல்வராகவன் ஷூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் கடுமையாக நடந்து கொள்வார். அவருக்கு கச்சிதமாக படத்தை எடுக்க வேண்டும் என்று முழு மூச்சில் இருப்பார். அவரைப் பார்த்தாலே துணை இயக்குனர்கள் ஓடிப் போய் ஒடிந்து கொள்வார்கள். அந்த அளவுக்கு மிகவும் சிறப்பான பெர்ஃபெக்ட்டான இயக்குனர் செல்வராகவன் என பாவா லக்ஷ்மணன் கூறியிருக்கிறார்.