Posted in

5G தொலைத்தொடர்பு கோபுரத்துக்கு மக்கள் கடும் எதிர்ப்பு!

கிளிநொச்சி, கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டு வரும் 5G தொலைத்தொடர்பு கோபுரத்திற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர். இது தங்களுக்கு தேவையற்றது என்றும், தங்கள் மற்றும் எதிர்கால சந்ததியினரின் சுகாதாரத்தைப் பாதிக்கும் என்றும் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

5G கோபுரத்தால் ஏற்படும் சுகாதாரக் கேடுகள் குறித்து ஏற்கனவே நடந்த நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டிய பொதுமக்கள், இத்தகைய கோபுரங்கள் தங்கள் வாழ்வாதாரத்தையும், உடல்நலத்தையும் ஆபத்தில் ஆழ்த்தும் என கவலை தெரிவித்தனர். உடனடியாக கோபுரத்தை அங்கிருந்து அகற்றுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் வலியுறுத்தியுள்ளனர்.

மக்களின் இந்த நியாயமான கோரிக்கையை ஏற்று, தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்களும் குரல் கொடுத்துள்ளனர். 5G தொழில்நுட்பத்தின் நன்மைகள் ஒருபுறம் இருந்தாலும், அதன் சாத்தியமான உடல்நலக் குறைபாடுகள் குறித்து உலக அளவில் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கிளிநொச்சி மக்களின் இந்த எதிர்ப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Exit mobile version