Posted in

ஜன நாயகன் 29ம் திகதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது – ரசிகர்கள் கொண்டாட்டம் !

 

ஜன நாயகன் 29ம் திகதி வெளியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது – ரசிகர்கள் கொண்டாட்டம் ! - Image 1

தளபதி விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்பட வெளியீடு குறித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இன்றைய தினம் தீர்ப்பு வெளியாக வாய்ப்பில்லை என்றே தகவல்கள் கசிகின்றன. 

இடையில் சனி, ஞாயிறு நீதிமன்ற விடுமுறை நாட்கள். அதனைத் தொடர்ந்து திங்கட்கிழமை (ஜனவரி 26) குடியரசு தின விடுமுறை என்பதால், வரும் 27-ஆம் தேதி செவ்வாய்க்கிழமைதான் இறுதித் தீர்ப்பு வெளியாகும் எனத் தெரிகிறது. இந்தத் தீர்ப்பு பெரும்பாலும் படக்குழுவுக்குச் சாதகமாகவே அமையும் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

ஒருவேளை 27-ஆம் தேதி சாதகமான தீர்ப்பு கிடைத்தால், சற்றும் தாமதிக்காமல் ஜனவரி 29-ஆம் தேதியே படத்தை ரிலீஸ் (Release) செய்யப் படக்குழுவினர் ரகசியமாகத் தயாராகி வருகின்றனர். முன்னதாக, உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்லத் திட்டமிட்டிருந்த தணிக்கை குழு (Censor Board), தற்போது அந்த முடிவைக் கைவிட்டுள்ளதாகத் தெரிகிறது. 

உயர்நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு மீண்டும் முட்டுக்கட்டை போடுவது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதால், 29-ஆம் தேதி ரிலீஸுக்கான வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

ஆனால், ஒருவேளைத் தீர்ப்பு எதிராக அமைந்தால் நிலைமை தலைகீழாக மாறும். அப்படி ஒரு சூழலில் படக்குழுவினர் டெல்லி உச்சநீதிமன்றத்தை (Supreme Court) நாட வேண்டியிருக்கும். 

அங்கு முறையீடு செய்து அனுமதி பெறுவதற்கு இன்னும் 2 அல்லது 3 வாரங்கள் வரை காலம் இழுபறியாகலாம். எனவே, வரும் 29-ஆம் தேதி ‘ஜனநாயகன்’ திரைக்கு வரவில்லை என்றால், படம் அடுத்த மாதம் (பிப்ரவரி) வரை தள்ளிப்போவது உறுதி என்பது தெளிவாகத் தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *