அந்த விஷயத்தில் நான் கஞ்சத்தனம்… பளீச்சுனு சொன்ன வாணி போஜன்!

அந்த விஷயத்தில் நான் கஞ்சத்தனம்… பளீச்சுனு சொன்ன வாணி போஜன்!

சீரியல் நடிகையாக இருந்து பின்னர் திரைப்பட நடிகையாக மாறி பிரபலமான நடிகையாக தற்போது வலம் வந்து கொண்டிருந்தவர் நடிகை வாணி போஜன். இவர் முதன் முதலில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா என்ற தொடரில் நடித்த அறிமுகம் ஆனார்.

அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் சீரியலில் நடித்து மிகப்பெரிய அளவில் பிரபலமானார் இதன் மூலம் இவருக்கு திரைப்பட வாய்ப்புகள் தேடி வர முதன் முதலில் ஒரு இரவு என்ற திரைப்படத்தில் நடிக்க துவங்கி பின்னர் ஓ மை கடவுளே திரைப்படத்தில் நடித்து மிகப்பெரிய அளவில் பேசப்பட்டார்.

அந்த படத்தில் மீரா என்ற கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதையும் ஈர்த்தார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் நீங்கள் வைத்திருக்கும் கார் என்ன கார் என கேட்டதற்கு நான் அந்த விஷயத்தில் ரொம்ப கஞ்சத்தனம் பண்ணுவேன். தெய்வமகள் சீரியலில் நடிக்கும் போது ஒரு காரை வாங்கினேன்.

அதைதான் நான் இப்போது வரை வைத்திருக்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் அந்த காரை மாற்ற தோணவில்லை. அதற்கு காரணம் எனக்கு மிகவும் லக்கியான காராகவும் இதுவரை எந்த விபத்தும் நடக்காமல் இருப்பதும் என் லக்கி காராக மாறிவிட்டது. இப்போது வரை எனக்கு கார் மாற்ற வேண்டும் என்ற எண்ணம் வரவில்லை என்று கூறியிருக்கிறார்.