அது என் குழந்தையே இல்ல… பணம் தான் எனக்கு முக்கியம் – குண்டு தூக்கி போட்ட சங்கீதா!

அது என் குழந்தையே இல்ல… பணம் தான் எனக்கு முக்கியம் – குண்டு தூக்கி போட்ட சங்கீதா!

தமிழ் சினிமாவில் தற்போதைய காமெடி நடிகரான ரெடின் கிங்ஸ்லி பல வருடங்களுக்கு முன்னரே நடிகராக திரைப்படத்துறையில் அறிமுகமானாலும் அவர் மிகப்பெரிய அளவில் பிரபலமாகவில்லை. அவருக்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அவர் யார் என்று தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தெரியாமல் இருந்தது.

இப்படியான ஒரு சமயத்தில் தான் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்தில் நயன்தாராவுடன் சேர்ந்து அவர் காமெடி நடிகராக நடித்திருந்தார். அந்த படம் அவருக்கு மிகப்பெரிய அளவில் ரீச் ஆகி அவரது காமெடி மக்கள் இடையே பேசப்பட்டது. இதன் மூலம் அவர் பிரபலமானார். தொடர்ந்து அவருக்கு திரைப்பட வாய்ப்புகளும் கிடைக்க துவங்கியது. அதன் பின் நெற்றிக்கண் திரைப்படத்தின் நடித்திருந்தார்.

பின்னர் ரஜினிகாந்தின் அண்ணாத்த திரைப்படத்திலும் நடித்திருந்தார். மேலும் சூர்யாவின் எதற்கும் துணிந்தவன் , விஜய்யின் பீஸ்ட் உள்ளிட்ட தொடர்ந்து பெரிய பெரிய ஹீரோக்களின் படங்களில் காமெடி நடிகராக நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக பார்க்கப்பட்டார். இதனையே திடீரென யாரும் எதிர்பார்க்காத வகையில் பிரபல சீரியல் நடிகையான சங்கீதாவை அவர் காதலித்து திருமணம் செய்து கொண்டார் .

50 வயதில் திருமணம் செய்து கொண்டதால் ரெடின் மோசமாக விமர்சிக்கப்பட்டதோடு அவரது மனைவி சங்கீதாவும் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வந்தார். அதுமட்டுமில்லாமல் இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர் அவருக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. பணத்திற்காக தான் திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியிட்டனர். இந்நிலையில் இது குறித்து முதன்முறையாக பேட்டி ஒன்றில் கூறியிருக்கும் சங்கீதா அது என் குழந்தையே இல்லை என்னுடைய சகோதரியின் மகள்தான் அது. ஆனால் என்னுடைய மகள் எனவும் நான் பணத்திற்காக திருமணம் செய்து கொண்டதாக பொய்யான செய்திகள் வெளியிடுகிறார்கள். ஆனால் அதற்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரமில்லை. யார் என்ன வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் நினைத்துக் கொள்ளட்டும் நான் என்னுடைய வாழ்க்கையில் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறேன் என கூறினார்.