பலகோடி சொத்துக்கள் முடக்கம்… நடுத்தெருவுக்கு வந்த நட்சத்திர நடிகை!

பலகோடி சொத்துக்கள் முடக்கம்… நடுத்தெருவுக்கு வந்த நட்சத்திர நடிகை!

பாலிவுட் சினிமாவின் நட்சத்திர நடிகையான ஷில்பா ஷெட்டி கடந்த 2007 ஆம் ஆண்டு ராஜ் குந்த்ரா என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணமே மிகப்பெரிய சர்ச்சைக்குள்ளான விஷயமாக பார்க்கப்பட்டது.

காரணம் ராஜ் குந்த்ரா மிகப் பெரிய தொழிலதிபர். அவரிடம் இருந்த பணத்திற்காக தான் அவரை திருமணம் செய்து கொண்டார் ஷில்பா ஷெட்டி என கடுமையாக விமர்சிக்கப்பட்டார். பின்னர் இதற்கெல்லாம் பதிலடி கொடுத்த ஷில்பா செட்டி நானும் மிகப்பெரிய நட்சத்திர நடிகையாக பாலிவுட்டில் உச்சத்தில் இருக்கிறேன்.

என்னிடமும் கோடி கணக்கில் சொத்துக்கள் இருக்கிறது. வார்த்தைகளை அளந்து பேசுங்கள் என கூறி பதிலடி கொடுத்தார். இதனிடையே ராஜ் குந்த்ரா கடந்த சில மாதங்களுக்கு முன்னர் ஆபாச பட வழக்கில் சிக்கி பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார்.இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் இந்த ஜோடி சிக்கி உள்ளனர்.

ஆம், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்திரா மீதான பண மோசடி வழக்கை தற்போது அமலாக்கத்துறை விசாரித்து வருகிறது. அதில் ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவருக்கு சொந்தமான 97.79 கோடி ருபாய் மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது.

மும்பை மற்றும் புனேவில் இருக்கும் வீடுகள் உள்ளிட்ட சொத்துக்கள் முடக்கப்பட்டு இருக்கிறது. மும்பையில் ராஜ் குந்திராவிடம் இருந்த 80 கோடி ருபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட்டை மிக குறைந்த தொகைக்கு மனைவி ஷில்பா ஷெட்டி பெயருக்கு மாற்றி இருக்கிறார். அந்த சொத்து முடக்கப்படுவதில் இருந்து தப்பிக்க தான் இதை செய்திருக்கிறார்கள் எனவும் சர்ச்சை எழுந்திருக்கிறது. பாலிவுட்டில் நட்சத்திர நடிகையாக இருந்த ஷில்பா ஷெட்டி தற்போது நடுத்தெருவுக்கு வந்துவிட்டார் என பாலிவுட்டில் பேசப்படுகிறது.