பிரபல பாடகி சுசித்ரா சுச்சி லீக்ஸ் விவகாரத்தை தொடர்ந்து தன்னுடைய முன்னாள் கணவரான கார்த்திக்கை விவாகரத்து செய்து பிரிந்து விட்டார் அதன் பிறகு சுசித்ரா ராஜா என்ற இலங்கை தமிழரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
அவர் ஒரு வழக்கறிஞர் என்றும் பேட்டியொன்றில் தெரிவித்துள்ளார். மேலும், அந்த பேட்டியில் உங்களுடைய புது திருமண வாழ்க்கையில் யாரும் தொந்தரவு செய்யவில்லை தானே என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சுசித்ரா, பயில்வான் தான் பெரிய தொந்தரவு. அவர் என் வீட்டிற்கு ஆள் வைத்து பிரச்சனை செய்ய இருக்கிறாரோ என்ற சந்தேகம் இருக்கிறது. அவர் இதை ஏற்கனவே செய்திருக்கிறார் என்றார்.
மேலும் புது வாழ்க்கை குறித்து பேசிய அவர், நானும் என் கணவரும் சேர்ந்து பல தொழில்கள் ஆரம்பிக்கலாம் என்று இருக்கிறேன். அதில், என் மாமியார் செய்யும் சமையலை பற்றி புத்தகம் எழுதலாம் என்று இருக்கிறேன். என் மாமியார் இலங்கை. நான் இப்போது இலங்கை மறுமகள். இராவணனை கட்டிக்கொண்டேன் என்று தெரிவித்துள்ளார்.
![athirvu](https://www.athirvu.in/wp-content/uploads/2024/05/01-154.jpg)