இந்த வெள்ளைக்கார கிளவி காப்புலி பொம்மையை வைத்து மாட்டிக் கொண்ட கதை !

 


6 பொலிஸ் உத்தியோகத்தர்கள் திடீரென ஒரு பப் க்கு உள்ளே நுளைந்து தற தற என்று அங்கே இருந்த பல பொம்மைகளை பையில் போட்டு எடுத்துச் செல்கிறார்கள். இதற்கு 61 வயதாகும் பப் உரிமையாளரான ""ரெயிலி"" கடும் எதிர்ப்பை தெரிவிக்கிறார். ஆனால் பொலிசார் எதனையும் காதுகொடுத்து கேட்க்கவே இல்லை. அங்கே நின்ற ஏனைய நபர்கள் திகைத்துப் போகிறார்கள். காரணம் என்னவாக இருக்கும். கஞ்சா பொம்மையா ? இல்லை இது அனைத்து கறுப்பின மக்களையும் கேலிசெய்யும் பொம்மைகள். (Video Attached)

 இவர்கள் எல்லா கறுப்பின மக்களையும் கேலிசெய்யும் வகையில். தனிக் கறுப்பில் செய்யப்பட்ட பொம்மைகள் பலவற்றை தமது பப்பில் காட்சிப் பொருளாக வைத்திருந்ததோடு. அந்த இடத்திற்கு யாராவது கறுப்பர்கள், குடிக்க வந்தால் கூட, முறைகேடாக நடந்துள்ளார்கள். இதனை அடுத்து பலர் கொடுத்த முறைப்பாட்டை அடுத்து அங்கே சென்ற 6 பொலிசார் ஒட்ட வழித்து, எல்லா பொம்மைகளையும் தூக்கிச் சென்றுவிட்டார்கள். அத்தோடு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்கள்.

 இனி இப்படி நடந்தால் கவுன்சில் உங்கள் லைசன்ஸை ரத்துச் செய்ய வாய்ப்புகள் இருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ளார்கள். 2023ம் ஆண்டில் இப்படியும் சில மனிதர்கள் இருக்கிறார்கள். ஆச்சரியம் ஆனால் உண்மையான விடையம் தான்.



புதியது பழையவை

தொடர்பு படிவம்