டெஹ்ரான்:
ஈரானின் முக்கிய நகரங்களில் நிகழ்ந்துள்ள சக்திவாய்ந்த வெடிப்புச் சம்பவங்களால் உலக நாடுகள் பெரும் பதற்றத்தில் ஆழ்ந்துள்ளன.
தளபதியைக் குறிவைத்த தாக்குதலா? தெற்கு ஈரானின் பண்டார் அப்பாஸ் (Bandar Abbas) நகரில் உள்ள 8 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிகழ்ந்த இந்த வெடிப்பில், ஈரான் புரட்சிகர பாதுகாப்புப் படையின் (IRGC) கடற்படைத் தளபதி அலிரேசா தங்சிரி (Alireza Tangsiri) கொல்லப்பட்டதாகச் சமூக வலைதளங்களில் தகவல்கள் காட்டுத்தீயாகப் பரவின. அமெரிக்கா தனது அதிநவீன ஏவுகணையைப் பயன்படுத்தி இந்தத் துல்லியத் தாக்குதலை நடத்தியதாகப் பலதரப்பட்ட வதந்திகள் பரவியதால் போர் மூளும் சூழல் உருவானது.
ஈரான் அரசு விடுத்துள்ள அதிரடி விளக்கம்:
இந்த வதந்திகளை ஈரான் அரசு ஊடகமான 'தஸ்னிம்' (Tasnim) கடுமையாக மறுத்துள்ளது.
உச்சகட்ட போர்ப் பதற்றம்: இந்த வெடிப்புச் சம்பவங்களில் ஒரு சிறுமி உட்பட 5 பேர் உயிரிழந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்கு இதில் எவ்விதப் பங்கும் இல்லை என்று தெரிவித்துள்ளன. இருப்பினும், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் விளைவுகள் விசித்திரமாக இருக்கும்" என்று எச்சரித்துள்ள நிலையில், ஈரானுக்குள் அடுத்தடுத்து நிகழும் இந்த மர்ம வெடிப்புகள் தற்செயலான விபத்துகளா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்ற சந்தேகம் இன்னும் உலக நாடுகளிடையே நீடித்து வருகிறது.
