இந்தச் சம்பவம் குறித்துப் பேசிய அதிபர் டொனால்ட் ட்ரம்ப், அந்தப் பெண் அதிகாரிகளைக் கொல்ல முயன்றதாகவும், தற்காப்புக்காகவே அதிகாரி சுட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக, "அந்த அதிகாரி உயிர் பிழைத்ததே பெரிய விஷயம், அவர் அதிர்ஷ்டசாலி" என்று ட்ரம்ப் கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஒரு பெண்ணின் உயிர் பறிபோயிருக்கும் வேளையில், எந்தக் காயமும் அடையாத அதிகாரியைப் பார்த்து அவர் 'அதிர்ஷ்டசாலி' என்று கூறியது பொறுப்பற்ற ஒரு பதில் எனப் பலரும் விமர்சித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ ஆதாரங்கள், ட்ரம்ப்பின் வாதத்திற்கு மாறாக உள்ளன. கார் அதிகாரிகளை நோக்கிப் பாய்வதற்குப் பதிலாக, அவர்களைத் தவிர்த்துவிட்டுச் செல்லவே அந்தப் பெண் முயன்றது வீடியோவில் தெளிவாகத் தெரிகிறது. சுடப்பட்ட பெண்ணின் மனைவி மற்றும் ஆறு வயதுக் குழந்தை கதறித் துடிக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், அந்தப் பெண் போராட்டக்காரர் கிடையாது என்றும், பயத்தில் அங்கிருந்து நகர முயன்றபோதுதான் சுடப்பட்டார் என்றும் அவரது குடும்பத்தினர் கண்ணீர் மல்கக் கூறி வருகின்றனர்.
இந்தக் கொடூரமான கொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து மினியாபோலிஸ் வீதிகளில் மக்கள் போராட்டங்களில் குதித்துள்ளனர்.
No Time to read : watch the Video
