ஈரானின் புதிய அதி உச்ச ஆண்மிக தலைவராக Mojtaba Khamenei தெரிவு: யுத்த நிறுத்தத்திற்கு வாய்ப்பில்லை என அறிவிப்பு !
மொஜ்தபா கமேனியின் நியமனம் குறித்து ஈரான் அரசு ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில், "இமாம் கமேனியின் பாதையைத் தொடரக்கூடிய தகுதியான ஒருவரை நாங்கள் தேர்ந்தெடுத்துள்ளோம்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், இந்தத் தேர்வை அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார். மொஜ்தபா கமேனி தமக்கு "ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு தேர்வு" என்றும், அமெரிக்காவின் அங்கீகாரம் இன்றி அவர் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியாது என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். இந்த Political tension காரணமாக மத்திய கிழக்கில் போர் மேகங்கள் மேலும் சூழ்ந்துள்ளன.
இதற்கிடையில், அமெரிக்காவுடனான மோதலில் ஈரானின் பிடிவாதம் குறையவில்லை. ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் கலிபாப், தனது நாடு தற்போது எந்தவொரு போர் நிறுத்தத்தையும் (Ceasefire) விரும்பவில்லை என்றும், ஆக்கிரமிப்பாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்காவின் Operation Epic Fury தாக்குதல்களில் இதுவரை ஏழு அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பென்டகன் உறுதி செய்துள்ளது. சவுதி அரேபியாவில் உள்ள தளம் ஒன்றின் மீது மார்ச் 1 அன்று நடத்தப்பட்ட தாக்குதலில் காயமடைந்த வீரர் ஒருவர் இன்று உயிரிழந்ததை அடுத்து இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
ஈரானின் புதிய தலைமைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான இந்த மோதல், உலகளாவிய Energy security மற்றும் கச்சா எண்ணெய் விநியோகத்தை வெகுவாகப் பாதித்துள்ளது. இஸ்ரேலியப் படைகள் ஈரானின் எரிசக்தி தளங்கள் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வரும் வேளையில், புதிய தலைவர் மொஜ்தபா கமேனிக்கு இஸ்லாமியப் புரட்சிகர பாதுகாப்புப் படை (IRGC) முழு ஆதரவைத் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் கடும் எச்சரிக்கைகளையும் மீறி, ஈரான் தனது ராணுவ நடவடிக்கைகளைத் தொடரும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த Geopolitical crisis அடுத்தகட்டத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.

No comments: