இன்று அதிகாலை 13,600 கிலோ GBU-57 குண்டுகளை ஈரானில் போட்டதா அமெரிக்கா ? அதிர்ந்த டெஹ்ரான்
இந்த தாக்குதல்கள் குறித்து பேசும்போது அமெரிக்க ஜனாதிபதி Donald Trump, “மத்திய கிழக்கில் நடைபெறும் இந்த போர் விரைவில் முடிவடையும்” என தெரிவித்தார். கடந்த 10 நாட்களுக்கு முன் தொடங்கியதாக கூறப்படும் இந்த military operation திட்டத்தை விட மிகவும் முன்னேறியுள்ளதாகவும் அவர் கூறினார். அதே நேரத்தில், உலகம் நினைப்பதை விட அமெரிக்கா ஏற்கனவே இந்த போரில் பல வகையில் வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர் வலியுறுத்தினார்.
ஆனால் ட்ரம்ப் கூறிய மற்றொரு கருத்து இந்த போரின் நிலை குறித்து புதிய கேள்விகளை எழுப்பியுள்ளது. “நாம் இப்போது இதை மிகப்பெரிய வெற்றி என்று கூறலாம். ஆனால் அதில் நிற்க மாட்டோம். தேவையானால் இன்னும் முன்னேறுவோம்,” என்று அவர் தெரிவித்தார். எதிரி முழுமையாக தோற்கடிக்கப்படும் வரை நடவடிக்கைகள் தொடரும் என்றும் அவர் கூறினார். இதனால், போர் முடிவடைகிறதா அல்லது இன்னும் தீவிரமாகப் போகிறதா என்ற குழப்பம் உருவாகியுள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க பாதுகாப்புத்துறை அதிகாரிகள் சிலர் இந்த நடவடிக்கைகள் இன்னும் ஆரம்ப நிலையில் தான் உள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். இதனால் US-Israel strike campaign இன்னும் விரிவடைய வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு நிபுணர்கள் கருதுகின்றனர். டெஹ்ரானில் நடந்ததாக கூறப்படும் இந்த பெரிய வெடிப்புகள் உலகளவில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அடுத்த சில நாட்கள் மத்திய கிழக்கு அரசியல் சூழ்நிலைக்கு மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன.

No comments: