Posted in

BREAKING NEWS : உடைந்த அதிமுக குழு தலைவர் சிவி. சண்முகம் வீட்டுக்குச் செல்கிறார் விஜய் !

தமிழக அரசியல் களம் இன்று ரத்தமும் சதையுமாக ஒரு மாபெரும் பிளவைச் சந்தித்துள்ளது. பிரதான எதிர்க்கட்சியான அதிமுக தற்போது இரண்டாக உடைந்துள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் தலைமையில் 30 சட்டமன்ற உறுப்பினர்கள் ஒரு தனிப் பெரும் சக்தியாகத் திரண்டுள்ளனர். மறுபுறம், எடப்பாடி பழனிசாமி பக்கம் வெறும் 17 எம்.எல்.ஏ-க்கள் மட்டுமே எஞ்சியிருக்கும் நிலையில், எடப்பாடியின் தலைமைத்துவம் கேள்விக்குறியாகியுள்ளது. இந்த பரபரப்பான சூழலில், இன்று மாலை 4.30 மணிக்கு சி.வி. சண்முகத்தின் இல்லத்திற்கு முதலமைச்சர் விஜய் நேரடியாகச் செல்லவிருப்பது, தமிழக அரசியலில் ஒரு மெகா அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

நாளை சட்டமன்றத்தில் முதலமைச்சர் விஜய் மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறவுள்ள நிலையில், சி.வி. சண்முகம் அணியைச் சேர்ந்த 30 சட்டமன்ற உறுப்பினர்களும் விஜய்க்கு ஆதரவாக வாக்களிக்க முடிவெடுத்துள்ளதாகத் தகவல்கள் கசிகின்றன. “அதிமுக என்னும் பேரியக்கத்தை அழித்ததே எடப்பாடியின் தவறான முடிவுகள்தான்; குறிப்பாக பாஜாக போன்ற மதவாதக் கட்சியோடு கூட்டணி வைத்ததே எங்களது சரிவுக்குக் காரணம்” என்று இந்த 30 எம்.எல்.ஏ-க்களும் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இவர்களின் இந்த அதிரடி முடிவு, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் எதிர்காலத்திற்குக் கொடுக்கப்பட்ட மரண அடியாகப் பார்க்கப்படுகிறது.

அடுத்த 15 ஆண்டுகளுக்கு, அதாவது வரப்போகும் மூன்று தேர்தல்களிலும் அதிமுகவால் மீண்டெழ முடியாது என்பதை இந்த 30 எம்.எல்.ஏ-க்களும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். இதனால், தங்களது அரசியல் எதிர்காலத்தைப் பாதுகாத்துக் கொள்ள விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைவது குறித்து அவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், கட்சி தாவல் தடைச்சட்டத்தின் சிக்கல்களைத் தவிர்க்கவும், தனது கட்சியின் தனித்துவத்தைப் பேணவும் விஜய் இந்த 30 பேரையும் அப்படியே ஏற்றுக் கொள்வாரா? அல்லது அவர்களைத் தனி அணியாகச் செயல்பட வைத்துத் தோழமை சக்தியாக மாற்றுவாரா? என்பது இன்று மாலை நடைபெறும் சந்திப்பிற்குப் பிறகு தெரியவரும்.

முதலமைச்சர் விஜய்யின் இந்தத் திடீர் மூவ், எதிர்க்கட்சிகளை ஒட்டுமொத்தமாக நிலைகுலைய வைத்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பறிக்கும் நோக்கில் சி.வி. சண்முகம் தரப்பு காய் நகர்த்தி வரும் வேளையில், விஜய் அவர்களுக்குக் கொடுக்கும் ஆதரவு என்பது எடப்பாடி பழனிசாமியை அரசியலில் இருந்தே அப்புறப்படுத்தும் ஒரு மாபெரும் திட்டமாகவே பார்க்கப்படுகிறது. இன்று மாலை 4.30 மணிக்குச் சென்னை நந்தனத்தில் உள்ள சண்முகம் இல்லத்தில் நடக்கப்போகும் அந்த “ரகசிய” சந்திப்பு, தமிழகத்தின் அடுத்த பத்து ஆண்டுகால அரசியலைத் தீர்மானிக்கப்போகும் ஒரு வரலாற்றுத் திருப்பமாகும்!