தமிழக பாஜாகவின் மாநிலத் தலைவராக இருந்து, அண்மையில் தனது பதவியையும் அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பையும் அதிரடியாக ராஜினாமா செய்த கே. அண்ணாமலை, தற்போது ‘திராவிட 2.0’ என்ற புதிய பிராந்திய அரசியல் தத்துவத்துடன் தனிப் போர்க்கொடி தூக்கியுள்ளார். நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் (TVK) மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை ஏற்படுத்தியதைத் தொடர்ந்து, தமிழகத்தின் அடுத்த பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள விஜயை அரசியல் ரீதியாக எதிர்கொள்ளவே அண்ணாமலையின் இந்த திடீர் வெளியேற்றமும் புதிய கட்சித் துவக்கமும் அரங்கேறியுள்ளதாகத் தெரிகிறது. இது மேலோட்டமாக அண்ணாமலையின் தனிப்பட்ட முடிவு போலத் தெரிந்தாலும், உண்மையில் தமிழகத்தில் விஜயின் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்த டெல்லி பாஜக தலைமை திரைமறைவில் வகுத்த “அல்டிமேட் மாஸ்டர் பிளான்” மற்றும் ஒரு புதிய அரசியல் வியூகம் இதுதான் என்று அரசியல் விமர்சகர்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.
பாஜகவிலிருந்து அதிகாரப்பூர்வமாக விலகிய சில மணிநேரங்களிலேயே, அண்ணாமலை ஆரம்பித்துள்ள இந்த புதிய இயக்கத்தில் இணைய லட்சக்கணக்கான இளைஞர்கள் ஒரே நேரத்தில் அலைகடலெனத் திரண்டனர். ஆன்லைன் மற்றும் சமூக வலைத்தளங்கள் வழியாக கட்சித் துவக்க அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, சுமார் 1,00,000-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் தங்களை இந்த புதிய கட்சியில் உறுப்பினர்களாகப் பதிவு செய்து கொண்டு தமிழக அரசியலை அதிர வைத்துள்ளனர். ஐபிஎஸ் (IPS) அதிகாரி என்ற பின்னணியுடனும், தனது ஆக்ரோஷமான அரசியல் பாணியாலும் ஏற்கனவே தமிழக இளைஞர்கள் மற்றும் படித்த நடுத்தர வர்க்கத்தினர் மத்தியில் அண்ணாமலை தனக்கென ஒரு பெரும் செல்வாக்கை உருவாக்கி வைத்திருந்தார். தற்போது அந்த இளைஞர் பட்டாளம் மொத்தமாக அண்ணாமலையின் புதிய பிராந்தியக் கட்சியை நோக்கித் திரும்பியிருப்பது ஆளும் தரப்பையும் மாற்று சக்திகளையும் உற்றுநோக்க வைத்துள்ளது.
அரசியல் வட்டாரங்களில் கசிந்துள்ள தகவல்களின்படி, 2026 தேர்தலில் பாரம்பரிய திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக நடுநிலை மற்றும் இளம் வாக்காளர்களின் வாக்குகளை விஜய் ஒட்டுமொத்தமாக அறுவடை செய்தார். தேசிய முகத்தோடு பாஜாகவில் அண்ணாமலை நீடித்தவரை, சிறுபான்மையினர் மற்றும் தீவிர தமிழ் தேசிய அமைப்புகளின் எதிர்ப்பு காரணமாக அண்ணாமலையிடம் செல்ல வேண்டிய இளைஞர்களின் வாக்குகள் எளிதாக விஜய் பக்கம் சாய்ந்தன. இதனை உடைக்கவே, அண்ணாமலையை பாஜாகவிலிருந்து வெளியேற்றி, முற்றிலும் மதச்சார்பற்ற, தமிழ் அடையாளத்துடன் கூடிய ஒரு புதிய பிராந்தியக் கட்சியைத் தொடங்க டெல்லி உளவுத்துறை ஐடியா கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம், விஜயின் “டிவிகே” (TVK) நோக்கிச் செல்லும் நடுநிலை மற்றும் படித்த இளைஞர்களின் வாக்குகளை அண்ணாமலை சரிபாதியாகப் பிரிப்பார், அது இறுதியாக விஜயின் வாக்கு வங்கியை கடுமையாகச் சிதைத்து பலவீனப்படுத்தும் என்பதுதான் பாஜகவின் கணக்கு.
நடிகர் விஜய் தனது கட்சியில் தங்களுக்குப் பின்னால் இருக்கும் பழைய ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு மட்டுமே முக்கியத்துவம் தருவதாகவும், தொழில்நுட்ப வல்லுநர்களுக்கும் திறமையான இளைஞர்களுக்கும் கதவுகள் அடைக்கப்பட்டுள்ளதாகவும் அண்ணாமலைத் தரப்பு ஒரு நுணுக்கமான பிரச்சாரத்தை இப்போதே கையில் எடுத்துள்ளது. “விஜய் காட்டிய பாதையில் அரசியல் மாற்றத்தை நம்பி வந்த இளைஞர்களுக்கு, எங்கள் புதிய கட்சியின் கதவுகள் எப்போதும் திறந்திருக்கும்” என அண்ணாமலை அறிவித்துள்ளது விஜயின் கூடாரத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. 2031 சட்டமன்றத் தேர்தலை இலக்காகக் கொண்டு, தமிழக அரசியலின் ‘இரண்டாவது துருவமாக’ உருவெடுக்க அண்ணாமலை திட்டமிட்டுள்ள நிலையில், விஜயின் வாக்குகளைப் பிரித்து அவரை வீழ்த்த பாஜகவின் இந்த மறைமுக வியூகம் எந்தளவுக்கு வேலை செய்யப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.