Posted in

எதிர்காலத்தில் விஜய் தான் நாட்டின் பிரதமர்! – அரசியல் களத்தில் புதிய பரபரப்பு!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் நடைபெற்று வரும் ஊழலற்ற மற்றும் மக்கள் நல ஆட்சியை ஒட்டுமொத்த இந்திய மக்களும் விரும்புவதாகவும், அதன் காரணமாக வரும் காலத்தில் விஜய் நாட்டின் பிரதமராக வர வேண்டும் என மக்கள் விரும்புகின்றனர் என்றும் புதுச்சேரி மாநிலத் தமிழக வெற்றிக் கழக (தவெக) எம்எல்ஏக்கள் தெரிவித்துள்ளனர். புதுச்சேரியில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக எம்எல்ஏக்கள் சாய் ஜெ. சரவணன்குமார் மற்றும் ராமு ஆகியோர் இக்கருத்தைப் பதிவு செய்தனர்.

முன்னதாக, புதுச்சேரி காவல்துறைக்குக் குடியரசுத் தலைவரின் ‘வண்ணக்கொடி விருது’ கிடைத்திருப்பதற்கு வரவேற்பு தெரிவித்த தவெக எம்எல்ஏக்கள், அந்தச் சிறப்புமிக்க விழாவில் தேசிய கீதம் பாடப்படும் போது ‘தமிழ்த்தாய் வாழ்த்து’ புறக்கணிக்கப்பட்டதற்குத் தங்களது பலத்த கண்டனத்தைப் பதிவு செய்தனர். தேசிய அளவிலான விழாவாக இருந்தாலும், மாநிலங்களின் பண்பாட்டு அடையாளமாக விளங்கும் தமிழ்த்தாய் வாழ்த்தைப் பாடாமல் விட்டது மிகவும் வருந்தத்தக்கது என்றும், வருங்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகள் மீண்டும் நடைபெறக்கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

தமிழக அரசு விழாக்களில் தமிழ்த்தாய் வாழ்த்துக்கே முதலிடம் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துச் செயல்படுத்தி வருவதைப் சுட்டிக்காட்டிய அவர்கள், அதேபோன்ற நடைமுறையைப் புதுச்சேரி அரசு விழாக்களிலும் தவறாமல் கடைப்பிடிக்க வேண்டும் என வலியுறுத்தினர். மொழி உரிமை மற்றும் மாநிலக் சுயாட்சியைப் பாதுகாப்பதில் தவெக அரசு காட்டி வரும் உறுதியான நிலைப்பாடு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதாக அவர்கள் குறிப்பிட்டனர்.

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் முன்னெடுத்து வரும் வெளிப்படையான நிர்வாகம், அடித்தட்டு மக்களுக்கான நலத்திட்டங்கள் மற்றும் ஆளுமைத் திறன் ஆகியவை தேசிய அளவில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருவதாகத் தெரிவித்த எம்எல்ஏக்கள், இதன் தொடர்ச்சியாகவே விஜய் நாட்டின் பிரதமராகி தேசத்தை வழிநடத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் எழுந்துள்ளதாகத் தெரிவித்தனர். புதுச்சேரி எம்எல்ஏக்களின் இந்தப் பேச்சு தற்போது தென்னிந்திய அரசியல் களத்தில் பெரும் விவாதத்தையும் கவனத்தையும் ஈர்த்துள்ளது.