சம்பாதித்த பணத்தை வாரி கொடுத்த சிவகார்த்திகேயன்- யாருக்குன்னு தெரியுமா?

சம்பாதித்த பணத்தை வாரி கொடுத்த சிவகார்த்திகேயன்- யாருக்குன்னு தெரியுமா?

தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் முதன்முதலில் தொலைக்காட்சியில் ஆங்கர் ஆக பணியாற்றி அதன் மூலம் தனக்கு இருந்த திறமையை கொஞ்சம் கொஞ்சமாக வளர்த்துக்கொண்டு சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார். அறிமுகமான ஒரு சில வருடங்களிலேயே மிகச்சிறந்த நடிகராக மக்களின் மனம் கவர்ந்த நடிகராக பாராட்டப்பட்டு மார்க்கெட்டின் உச்சத்தில் போய் உட்கார்ந்தார்.

குறிப்பாக குழந்தைகள் பெண்கள் என குடும்பங்கள் கொண்டாடும் ஹீரோவாக சிவகார்த்திகேயன் தென்பட்டு வந்தார். படங்களில் காமெடி காட்சி ,ரொமான்ஸ் என கலகலப்பாக நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களையும் தன் வசப்படுத்தி ஈர்த்தார். இதனிடையே சில பல சர்ச்சைகளிலும், பிரச்சனைகளில் சிக்கினார்.

அதையும் தாண்டி தொடர்ந்து திரைப்பட நடிகராக முன்னணி இடத்தை தக்க வைத்துக் கொண்டிருக்கிறார். இருந்தாலும் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தனது நடிப்பில் மற்றும் வேலைகளில் கவனத்தை செலுத்தி வருகிறார். இந்நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ஒரு மிகப்பெரிய விஷயம் ஒன்றை செய்து அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியிருக்கிறார். ஆம் பெரிய நடிகர்களை கொடுக்க தயங்கும் அளவுக்கு மிகப்பெரிய தொகையை நடிகர் சங்க கட்டிடம் கட்ட அவர் கொடுத்திருப்பது ஆச்சரியத்தை அளித்துள்ளது.

அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது 50 லட்சம் ரூபாயை நடிகர் சங்கத்திற்கு நன்கொடையாக கொடுத்து இருக்கிறார். நடிகர் சங்க தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி ஆகியோரிடம் இதற்கான காசோலையை சிவகார்த்திகேயன் வழங்கி இருக்கிறார். இதன் அறிக்கை தற்போது இணையத்தில் வைரலாக சிவகார்த்திகேயனை பலரும் பாராட்டியுள்ளனர்.