Posted in

ஈரான் அதிபரை சந்திக்க ஆவலாக இருக்கிறேன் என்கிறார் ரம்- அரசியலில் அடுத்த திருப்பம் !

உலக அரங்கில் எப்போதுமே கணிக்க முடியாத அதிரடி அரசியல் ஆட்டங்களை ஆடும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தற்போது ஈரான் விவகாரத்தில் சர்வதேச நாடுகளை அதிர வைக்கும் மிக முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அணு ஆயுதப் போரின் விளிம்பில் நின்ற ஈரானுடன் தற்போது அமெரிக்கா மிக ரகசியமாக அமைதிப் பேச்சுவார்த்தைகளை நடத்தி வரும் வேளையில், ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனியை நேரில் சந்திக்கத் தான் ஆவலாக இருப்பதாக டிரம்ப் அறிவித்துள்ளார். “அவரைச் சந்திப்பதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை, அப்படி ஒரு சந்திப்பு நடந்தால் நான் பெருமையடைவேன்” (Honoured) என்று டிரம்ப் கூறியிருப்பது உலக நாடுகளின் புருவங்களை உயர்த்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய மிகக் கொடூரமான வான்வழித் தாக்குதலில், ஈரானின் முன்னாள் உச்ச தலைவர் அலி கமேனி கொல்லப்பட்டார். அவரது மரணத்திற்குப் பின், ஈரானின் புதிய உச்ச தலைவராகப் பொறுப்பேற்ற அவரது மகன் மொஜ்தாபா கமேனி, அந்தத் தாக்குதலில் படுகாயமடைந்து உடலின் பல பாகங்களை இழந்துவிட்டதாகவும், அவர் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்றும் பல வதந்திகள் பரவின. ஆனால், அந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மொஜ்தாபா கமேனி உயிருடன் தான் இருக்கிறார் என்றும், அவரே நேரடியாக இந்தப் பேச்சுவார்த்தைகளுக்கு ஒப்புதல் வழங்கி வழிநடத்தி வருகிறார் என்றும் டிரம்ப் மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தற்போது உறுதிப்படுத்தியுள்ளனர்.

பாகிஸ்தானின் தூதரகச் சமரச முயற்சியுடன் மிகவும் விறுவிறுப்பாக நடந்து வரும் இந்தப் பேச்சுவார்த்தையில், ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக, ஈரான் இனி அணு ஆயுதங்களை உருவாக்க மாட்டாது என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக டிரம்ப் அதிரடியாகக் கூறியுள்ளார். “அவர்கள் அணு ஆயுதம் வைப்பதற்கு நாம் ஒருபோதும் அனுமதிக்க முடியாது, தற்போது அதற்கு அவர்கள் சம்மதித்துள்ளனர், இதுவே இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய வெற்றி” என்று அமெரிக்காவின் ‘பாட் ஃபோர்ஸ் ஒன்’ (Pod Force One) பாட்காஸ்டில் டிரம்ப் பேசியுள்ளார்.

இருப்பினும், இந்த அமைதி ஒப்பந்தம் இறுதி நிலையை எட்டவில்லை என்றால், அமெரிக்கா உடனடியாக பேச்சுவார்த்தையில் இருந்து வெளியேறி, ஈரான் மீது மீண்டும் மிகக் கடுமையான ராணுவ நடவடிக்கைகளைத் தொடங்கும் என்றும் டிரம்ப் எச்சரித்துள்ளார். தற்போதைய சூழலில் இரு நாடுகளுக்கும் இடையே ஒரு சுமுகமான உடன்பாடு ஏற்பட்டு வருவதால், விரைவில் அமெரிக்க அதிபர் டிரம்பும், ஈரானின் புதிய உச்ச தலைவர் மொஜ்தாபா கமேனியும் ஒரே மேடையில் வரலாற்றுச் சிறப்புமிக்க சந்திப்பை நிகழ்த்துவார்கள் என்று வெள்ளை மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.