விபத்தில் சிக்கிய பாக்கிஸ்தான் விமானத்தில் 3 கோடி ரூபா பணப் பை


பாகிஸ்தான் விபத்தில் சிக்கிய விமானத்தில் இருந்து 2 பைகளில் பல்வேறு நாடுகளின் பணக்கட்டுகள் (இந்திய மதிப்பு ரூ.3 கோடி) இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது என அதிர்வு இணையம் அறிகிறது. பாகிஸ்தானில் கடந்த 22-ந்தேதி லாகூரில் இருந்து கராச்சிக்கு சென்ற விமானம் தரை இறங்க முயன்ற போது அப்பகுதியில் உள்ள குடியிருப்பில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் 97 பேர் உயிரிழந்தனர். 2 பேர் மட்டுமே உயிர் பிழைத்தனர். மேலும், விமானம் தரையிறங்கும்போது கட்டுப்பாட்டு நிலைய எச்சரிக்கையை பைலட் மீறியதால் விபத்து ஏற்பட்டதாக தகவல் வெளியானது.

இந்நிலையில் விமானத்தின் இடிபாடுகளில் இருந்த உடைமைகளை உரியவர்களிடம் ஒப்படைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் 2 பைகளில் பல்வேறு நாடுகளின் பணக்கட்டுகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்திய மதிப்பு ரூ.3 கோடி பணம் இருந்தது. இந்த பணம் யாருடையது என்றும் விமான நிலைய சோதனையை மீறி பெரிய தொகை எப்படி விமானத்தில் கொண்டு வரப்பட்டது என்றும் விசாரணை நடக்கிறது.

புதியது பழையவை

தொடர்பு படிவம்