மண்டையில் சுட்டு இவர் கதையை முடிக்க இந்தோனேசிய அதிகாரிகள் நாள் குறித்தார்கள்

 

இந்தோனேனிய சிறையில், அதிலும் காடையர்கள், கொலையாளிகள், கற்பழிபத்தவர்கள் என்று பலர் உள்ள சிறையில் இந்த பிரிட்டிஷ் மூதாட்டி தங்கி உள்ளார். இவரை தலையில் சுட்டு, தண்டனையை நிறைவேற்ற வேண்டும் என்று நீதிபதி தெரிவித்துள்ளார். 5 பேர் சுடுவார்கள். அந்த 5 பேரில் ஒருவரின் துப்பாக்கியில் தான் உண்மையான குண்டு இருக்கும். மீதம் உள்ள 4 பேரின் துப்பாக்கியில் போலிக் குண்டு இருக்கும். இதனால் சுட்ட 5 பேருக்கு கூட, யார் சுட்டதில் அவர் இறந்தார் என்பது தெரியாது. இப்படி கடுமையான சட்ட திட்டங்கள் உள்ள இந்தோனேசியாவுக்குள் கொக்கெயின் போதைப் பொருளை கொண்டு சென்றார் என்ற குற்றத்தில் இந்த மூதாட்டியை கைதுசெய்தார்கள் பொலிசார். இது உண்மையா ?

 Lindsay Sandiford, என்ற இந்த 64 வயது மூதாட்டி தனது விடுமுறையை கழிக்க என இந்தோனேசியா சென்றார். ஆனால் அவரது சூட்கேசில் 1.6 மில்லியன் பவுண்டுகள் பெறுமதியான கொக்கேயின் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இந்த கொக்கேயின் எப்படி வந்து என்று எனக்குத் தெரியாது என்று லின்சி கூறி இருந்தார். ஆனால் நாம் நினைப்பது போல லின்சி ஒன்றும் அப்பாவி அல்ல. மாறாக இவர் பெரிய மாஃபியா. பெரிய கேங்ஸ்டரும் கூட. 2 பேரப்பிள்ளைகள் இவருக்கு உள்ளார்கள். ஆனால் இவர் அட்ராசிட்டியே தனி. பல நாடுகளில் இவரைப் பிடிக்க பொலிசார் பிடியாணை பிறப்பித்துள்ளார்கள். இன்ரர் போலுக்கே தண்ணி காட்டிய சாண்டி.


வேறு ஒரு பெயரில், அடிக்கடி இந்தோனேசியா வந்து சென்று கொண்டு இருந்தார். இவர் பல முறை கொக்கேயினை கடத்தியுள்ளார் ஆனால் மாட்டியதே இல்லை. ஆனால் இறுதியில் 2013 ஏர் போட்டில் வைத்து சிக்கிக் கொண்டார். அதுவும் சூட்கேசில் இருந்த கொக்கேயினால் தான். தற்போது இவரை சுட்டு கொன்று தண்டனையை நிறைவேற்ற உள்ளது இந்தோனேசிய அரசு. ஆனால் பிரித்தானிய அரசு, எந்த ஒரு கேள்வியும் எழுப்பவே இல்லை.  சாவை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கும் லின்சி, தற்போது ஒரு ஞானியாக மாறிவிட்டாராம். அமைதியாக இருப்பது, உடைகள் பின்னுவது. என்று ஒரு மாகான் போல ஆகிவிட்டாராம்.



புதியது பழையவை

தொடர்பு படிவம்