GO BACK

மனித இனத்தின் மீதான வெறுப்பே காரணம்! - 5 பேரைக் கொன்ற சிறுவனுக்கு ஆயுள் தண்டனை!

2022-ஆம் ஆண்டு அக்டோபர் 13-ஆம் தேதி, வட கரோலினாவின் ஹெடிங்ஹாம் (Hedingham) பகுதியில் நடந்த கோரமான துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 5 பேரைக் கொன்ற ஆஸ்டின் தாம்சனுக்கு (தற்போது 18 வயது), பிப்ரவரி 13, 2026 அன்று பரோல் இல்லாத ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சம்பவம் நடந்த அன்று 15 வயதாக இருந்த ஆஸ்டின், முதலில் தனது 16 வயது அண்ணன் ஜேம்ஸ் தாம்சனை வீட்டிலேயே சுட்டுக் கொன்று, பின்னர் 57 முறை கத்தியால் குத்திக் கொடூரமாகக் கொலை செய்தான். அதன்பிறகு தெருவில் இறங்கி, பணியில் இல்லாத காவல்துறை அதிகாரி கேப்ரியல் டோரஸ் உள்ளிட்ட நான்கு அண்டை வீட்டாரைச் சுட்டுக் கொன்றான். இந்தத் தாக்குதலில் மேலும் இருவர் படுகாயமடைந்தனர்.

இந்த வழக்கு விசாரணையின் போது, தான் ஏன் இந்தக் கொலையைச் செய்தேன் என்பது குறித்து ஆஸ்டின் ஒரு கடிதம் எழுதியிருந்தான். அதில், "மனித இனத்தின் மீதான வெறுப்பு" காரணமாகவே தான் இந்தத் தாக்குதலை நடத்தியதாக அவன் குறிப்பிட்டுள்ளது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தாக்குதலுக்குப் பிறகு தன்னைத்தானே சுட்டுக்கொண்டதில் ஆஸ்டினுக்கு மூளையில் பலத்த காயம் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பால் ரிட்ஜ்வே (Judge Paul Ridgeway), ஆஸ்டினின் செயல் "மனித உயிர் மீதான கடும் அலட்சியம்" என்று சாடினார். ஆஸ்டின் சிறுவனாக இருந்தபோது இந்தக் குற்றத்தைச் செய்திருந்தாலும், குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில்கொண்டு அவனுக்குத் தனது வாழ்நாள் முழுவதும் சிறையில் இருக்கும் வகையில் பரோல் இல்லாத ஆயுள் தண்டனையை நீதிபதி உறுதி செய்தார்.