ஈரான் எல்லையை நோக்கி இரண்டாவது ‘இரும்பு அரக்கன்’ வருகை: அமெரிக்காவின் மெகா ஆர்மடா! போருக்குத் தயாரா ட்ரம்ப்?
லண்டன்: மத்திய கிழக்கில் போர் மேகங்கள் முன்னெப்போதும் இல்லாத வகையில் சூழ்ந்துள்ளன. ஏற்கனவே அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலுடன் இணைவதற்காக, அமெரிக்காவின் மற்றொரு பிரம்மாண்ட அணுசக்தி போர்க்கப்பலான யுஎஸ்எஸ் ஜார்ஜ் எச்.டபிள்யூ. புஷ் (USS George H.W. Bush) புறப்படத் தயாராக உள்ளது. ஈரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், "மிகவும் கடுமையான நடவடிக்கை" எடுக்கப்படும் என அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்த சில மணிநேரங்களிலேயே இந்த அதிரடி நகர்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த இரண்டாவது போர்க்கப்பல் வருகையானது ஈரானுக்கு விடுக்கப்பட்ட ஒரு "இறுதி எச்சரிக்கை" (Final Warning) என்று சர்வதேச நிபுணர்கள் கருதுகின்றனர். அதிபர் ட்ரம்ப் தனது ‘ஆர்மடா’ வியூகத்தின் மூலம் ஈரானை முழுமையாகச் சுற்றி வளைக்கத் திட்டமிட்டுள்ளார். வர்ஜீனியா கடற்கரையில் பயிற்சியில் இருந்த இந்த கப்பல், தனது பணிகளை பாதியிலேயே முடித்துவிட்டு மத்திய கிழக்கு நோக்கி விரைந்து வருகிறது. இந்த இரண்டு மெகா போர்க்கப்பல்களும் இணைந்தால், நூற்றுக்கணக்கான எஃப்-35 போர் விமானங்கள் மூலம் ஈரானின் அணுசக்தி மையங்களை ஒரே நாளில் தரைமட்டமாக்க முடியும்.
தற்போது ஓமனில் நடந்து வரும் ரகசியப் பேச்சுவார்த்தையில் ஈரான் பிடி கொடுக்க மறுத்து வருவதே அமெரிக்காவின் இந்த ஆக்ரோஷமான முடிவுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. "ஒன்று உடன்படிக்கைக்கு வாருங்கள், அல்லது எங்களது வலிமையைச் சந்திக்கத் தயாராகுங்கள்" என்ற செய்தியை ட்ரம்ப் இதன் மூலம் நேரடியாக ஈரானியத் தலைமைக்கு அனுப்பியுள்ளார். இந்த வார இறுதியில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அமெரிக்கா செல்லவுள்ள நிலையில், அங்கு ஈரானுக்கு எதிரான ‘இறுதித் தாக்குதல்’ திட்டம் வகுக்கப்படலாம் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
மறுபுறம், ஈரானும் தனது ஏவுகணைகளைத் தயார் நிலையில் வைத்துள்ளது. இந்த இரண்டு ஆர்மடாக்களும் (Armadas) அரபிக் கடலில் சங்கமிக்கும்போது, அது மூன்றாம் உலகப்போருக்கு வழிவகுக்குமா? அல்லது ஈரான் பணிந்து போகுமா? என்ற அச்சத்தில் உலக நாடுகளின் கண்கள் இப்போது மத்திய கிழக்கை நோக்கித் திரும்பியுள்ளன. அடுத்த 48 மணிநேரம் உலக வரலாற்றில் மிக முக்கியமான ஒரு காலக்கட்டமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
