ஓடும் பேருந்தில் நபர் தீக்குளித்ததால் பயங்கர தீ விபத்து - 6 பேர் உடல் கருகி பலி: சுவிட்சர்லாந்தில் கொடூரம்(VIDEO)
நேரில் பார்த்த சாட்சிகள் மற்றும் உள்ளூர் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஒரு நபர் திட்டமிட்டே இந்தச் செயலைச் செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவர் பேருந்துக்குள் பெட்ரோலை ஊற்றி தன்னைத்தானே எரித்துக் கொண்டதாகவும், அதன் விளைவாகவே மற்ற பயணிகளும் சிக்கிக் கொண்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இது ஒரு தற்கொலை முயற்சியாகவோ அல்லது திட்டமிட்ட வன்முறையாகவோ இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இருப்பினும், இது ஒரு பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து காவல்துறையினர் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்விதக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.
சுவிஸ் அதிபர் கை பார்மெலின் (Guy Parmelin) இந்தச் சம்பவத்திற்குத் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார். "சுவிட்சர்லாந்தில் மக்கள் மீண்டும் ஒரு கோரமான தீ விபத்தில் உயிரை இழந்திருப்பது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையினரின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், இந்தச் சம்பவத்தின் பின்னணியில் உள்ள மர்மத்தை வெளிக்கொணர தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

No comments: